400 பேரின் காமப் பசிக்கு இரையான தாயை இழந்த 16 வயது சிறுமி
16 Nov,2021
மஹாராஷ்டிராவில், தாயை இழந்த, 16 வயது சிறுமியை ஒரு போலீஸ்காரர் உட்பட 400 பேர் பாலியல் கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மஹாராஷ்டிராவில் உள்ள பீட் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் தாய், இரு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து, தந்தை, சிறுமியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். புகுந்த வீட்டிற்குச் சென்ற சிறுமி, மாமனாரின் பாலியல் தொல்லை தாங்காமல் சில மாதங்களில் பிறந்த வீட்டிற்கு வந்து விட்டார். அதன் பின் வேலை தேடி அம்பிஜோகய் நகருக்குச் சென்றுள்ளார்.
அங்கு அச்சிறுமியை சிலர் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களில் ஒரு போலீஸ்காரர் உட்பட 400 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தற்போது இரண்டு மாத கர்ப்பிணியான அந்த சிறுமி கொடுத்த புகாரில், நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் கருவைக் கலைக்க, குழந்தைகள் நல்வாழ்வுக் குழு சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.
மஹாராஷ்டிராவில் டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை, 33 இளைஞர்கள் ஒன்பது மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்தது சமீபத்தில் அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் ஒரு சிறுமியை 400 பேர் பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.