திருச்சி கல்லூரி துணை முதல்வரின் 30 ஆபாச வீடியோக்கள் -போலீசார் அதிர்ச்சி
27 Oct,2021
ர் கல்லூரி துணை முதல்வர் தன்னை திமுக நிர்வாகிகள் கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வந்த போது துணை முதல்வரின் செல்போனை ஆய்வு செய்தபோது தற்போது துணை முதல்வரின் 30 ஆபாச வீடியோக்கள் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
தன்னுடன் கல்லூரியில் பழகிய பெண்ணுடன் எடுத்த ஆபாச படங்கள் தான் அத்தனை வீடியோக்கள் என்பதை தெரிந்து மேலும் அதிர்ந்து போயிருக்கிறார்கள் போலீசார்.
திருச்சியைச் சேர்ந்த விமலாதித்தனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்து வந்த இவரை ஒழுங்கீன செயல்கள் காரணமாக கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்திருக்கிறது.
இதையடுத்து பிராட்டியூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகவும் கல்லூரியில் துணை முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார். இவர் பணி நீக்கம் செய்யப்பட்ட கல்லூரியில் நிவேதிதா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்திருக்கிறது. அவருடன் பலமுறை தனிமையில் இருந்து அதை வீடியோவாக எடுத்து வைத்திருந்திருக்கிறார்.
இந்த நிலையில் நிவேதாவுக்கு விமலாதித்தன் வரன் தேடி உறையூரை சேர்ந்த சசி குமார் என்பவரை திருமணம் செய்து வைத்திருக்கிறார். திருமணத்திற்கு பின்னரும் நிவேதிதாவின் விமலாதித்தன் தொடர்பில் இருப்பது சசிகுமாருக்கு தெரியவந்திருக்கிறது. ஆத்திரமடைந்த அவர் விமலாதித்தனை தனது கூட்டாளிகளுடன் கடத்திச்சென்று தன்னுடைய திருமண செலவு 15 லட்சம் கேட்டு மிரட்டி இருக்கிறார்.
அவரும் மிரட்டலுக்கு பயந்து இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார். விமலாதித்தன் பணம் கேட்டு மிரட்டியதாகவும் அடித்து துன்புறுத்தியதாவும், ல் அவர் மனைவி தன் கணவரின் உயிருக்கு பயந்து 40 ஆயிரம் பணம் சொத்து பத்திரங்களையும் சசிகுமாரிடம் கொடுத்திருக்கிறார். அதன் பின்னர் திருச்சி செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் தன்னை சிலர் கடத்திச் சென்று பணம் பறித்ததாக விமலாதித்தன் புகார் அளித்திருக்கிறார்.
இந்த புகாரின் பேரில் சசிகுமார், பிரசாந்த், நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையில் விமலாத்தனின் செல்போனை போலீசார் எடுத்து ஆய்வு நடத்தியபோது 30 ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டு போலீஸார் அதிர்ந்து போயிருக்கிறார்கள். தன்னுடன் பழகிய அந்தப்பெண்ணுடன் மிக நெருக்கமாக ஆபாச வீடியோக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள். விமாலதித்தன் முன்னர் ஒரு கல்லூரியில் பணியாற்றிய போது அந்த கல்லூரியை சேர்ந்தவர்தான் என்பதும் தெரிந்து மேலும் அதிர்ந்த் போயிருக்கிறார்கள்.
இத்தனை வீடியோக்கள் இருக்கும் நிலையில் வேறு ஏதேனும் பெண்களை இப்படி ஆபாசமாக படம் எடுத்து வைத்திருக்கிறாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.