லண்டனில் லாக் டவுன் வரவுள்ளதா ? கிருஸ்மஸ் தினத்திற்கு முன்னர் லாக் டவுன் வரும் என்கிறார் விஞ்ஞானி !
24 Oct,2021
பிரித்தானியாவில் ஒரு நாளைக்கு 42,000 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில். சாவு எண்ணிக்கை 223 ஆக உயர்வடைந்து வருகிறது. ஆனால் எவருமே இதனை கண்டு கொள்ளவே இல்லை. அரசாங்கம் ஆனாலும் சரி, பொதுமக்கள் ஆனாலும் சரி கொரோனாவா ? அப்படி என்றால் என்ன என்று கேட்க்கும் நிலையில் தான் உள்ளார்கள். ஆனால் இதே நிலை நீடித்தால், டிசம்பர் மாதம் 25ம் திகதிக்கு முன்னதாக லாக் டவுனை நிச்சயம் அறிவிக்க வேண்டிய கட்டாய சூழ் நிலை வரும் என்று, பேராசிரியர் மற்றும் மருத்துவ விஞ்ஞானியான பீட்டர் தெரிவித்துள்ளார். இவரே அரசாங்கத்திற்கு அறிவுரை கூறும் முக்கிய புள்ளி என்பது குறிப்பிடத்தக்க விடையம். இவர் கூறுவதை பிறம் தள்ள முடியாது. ஏன் எனில் முன்னர் பல தடவை..
பீட்டர் குறிப்பிட்ட பல விடையங்கள் நடந்துள்ளது. அதனால் பிரித்தானிய அரசு இவர் கூற்றுக்கு மரியாதை கொடுத்து வருகிறது. எனவே மீண்டும் முக கவசம் அணியும் நடை முறை அமுலுக்கு வரலாம் என்றும். வேறு பல கட்டுப்பாடுகளும் வரக் கூடும் என்ற பேச்சு அடிபட ஆரம்பித்து விட்டது.