காணாமல் போன 13 வயது சிறுமி சடலமாக கண்டெடுப்பு..!
10 Oct,2021
மயிலாடுதுறை அருகே காணாமல் போன சிறுமி ஆடை கிழிக்கப்பட்ட நிலையில் சடலமாக கடெண்டுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வில்லியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் கண்மணி (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவி நேற்று இரவு 9 மணி அளவில் தனது மாமா பாலசுப்ரமணியன் வீட்டிற்கு சென்று வருவதாக கூறியுள்ளார்.
அங்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் பாலசுப்ரமணியன் வீட்டிக்கு சென்று பார்த்தபோது கண்மணி அங்கேயும் இல்லை. தொடர்ந்து அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துவிட்டு குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அங்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் பாலசுப்ரமணியன் வீட்டிக்கு சென்று பார்த்தபோது கண்மணி அங்கேயும் இல்லை. தொடர்ந்து அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துவிட்டு குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இரவில் மாமா வீட்டுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்ற 13 வயது சிறுமி ஆடைகள் கிழிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இரவில் சிறுமி தனியாக சென்றதால்தான் இதுபோன்ற விபரீதம் நடந்திருப்பதாக கூறும் போலீசார் சிறுமிகளை இரவில் எங்கும் தனியாக அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர்.