கொரோனா பாதிப்பு: இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழா ரத்து
24 Sep,2021
கொரோனா தொற்று பரவலால் இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழா ரத்து செய்யப்படுவதாக நோபல் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் விதர் ஹெல்ஜெசன் கூறியுள்ளார்.
நோபல் பரிசு ஒரு உலகளாவிய நிகழ்வு. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கண்டங்களில் பல்வேறு சாதனைக்காக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த மாதம் 4 முதல் 11-ஆம் தேதி வரை அறிவிக்கப்படவுள்ளன.
கடந்த ஆண்டைப்போலவே இந்த முறையும் ஸ்டாக்ஹோம் மற்றும் ஓஸ்லோ நகரங்களில் காணொலி மூலம் மிக எளிமையான முறையில் வரும் டிசம்பரில் 10 அன்று நோபல் பரிசு வழங்கப்படும்.
தொற்றுநோய் மற்றும் சர்வதேச பயண சாத்தியக்கூறுகள் குறித்த நிச்சயமற்ற தன்மை போன்ற பல்வேறு காரணங்களால் நோபல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்கள் நாடுகளில் அதனை பெற்றுக்கொள்வார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.