ஆப்கனில் இருந்து ஒரே நாளில் 21 ஆயிரம் பேரை மீட்ட அமெரிக்கா
25 Aug,2021
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அங்குள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா மீட்டு வருகிறது.
இந்நிலையில், 'மக்களை வெளியேற்றும் பணியை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். கெடு நீட்டிப்பு கிடையாது' என, தலிபான்கள் கூறியுள்ளதால், மக்களை மீட்கும் பணியை அமெரிக்கா விரைவுபடுத்தி உள்ளது.
கடந்த 23ம் தேதி காலை தொடங்கி நேற்று (24ம் தேதி) காலை வரையிலான 24 மணி நேரத்தில், மிக அதிக அளவாக, 21,600 பேரை அமெரிக்கா வெளியேற்றி இருக்கிறது. 37 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 12 ஆயிரத்து 700 பேரையும், நட்பு நாடுகளின் விமானங்கள் மூலம் 8,900 பேரையும் மீட்டு உள்ளனர். கடந்த 22ம் தேதி 16,000 பேர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.