காட்டுப்பன்றியின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டு போவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்தினர். இல்லையென்றால், கார்பன் உமிழ்வால் மிகப்பெரிய பருவநிலை சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தனர்.
எட்டு விஞ்ஞானிகள் கொண்ட ஒரு ஆராய்ச்சிக் குழு, தைவானின் மொத்த பரப்பளவுக்கு இணையான மேற்பரப்பு அளவில், காட்டுப்பன்றிகள் மண்ணை தோண்டியுள்ளன என்றும், இதனால் ஆண்டுக்கு 4.9 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளிப்படுகிறது என்றும் கண்டறிந்துள்ளது.
சமீபத்தில், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் உலகளாவிய சேதத்தை ஆய்வு செய்தது ஒரு அறிவியல் ஆய்வாளர்கள் குழு. இதிலே, அதிகப்படியான கார்பன் உமிழ்வுகளும் அடங்கும். கடந்த வாரம் குளோபல் சேன்ஜ் பயாலஜி இல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், குயின்ஸ்லாந்து பல்கலைகழகம், கேன்டர்பரி பல்கலைகழகம் மற்றும் மெனோவாவில் உள்ள ஹவாய் பல்கலைகழம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
எட்டு விஞ்ஞானிகள் கொண்ட ஒரு ஆராய்ச்சிக் குழு, தைவானின் மொத்த பரப்பளவுக்கு இணையான மேற்பரப்பு அளவில், காட்டுப்பன்றிகள் மண்ணை தோண்டியுள்ளன என்று கண்டறிந்துள்ளனர்.
இதனால், ஆண்டுக்கு 4.9 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளிப்படுகிறது என்றும் கண்டறிந்துள்ளது. இந்த கார்பன் உமிழ்வுகளின் அளவு, ஒரு மில்லியன் கார்களின் கார்பன் உமிழ்வுக்கு இணையானது. மேலும், இந்த உமிழ்வுகள் பெரும்பாலும் ஓசியானாவில் காணப்படுகிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் ஆய்வுக்காக, இந்த விஞ்ஞானிகள் குழு, உலகளாவிய அளவில் இதன் தாக்கம் எவ்வளவு என்பதைக் கண்டறிய, தென்கிழக்கு ஆசியா, ஓசியானா, ஆப்பிரிக்கா மற்றும் அமேரிக்க நாடுகளில் உள்ள காட்டுப் பன்றி எண்ணிக்கையில், 10,000 மாதிரிகளை இயக்கி, ஆய்வு செய்தது.
ஒவ்வொரு உருவகப்படுத்தலுக்கும், மற்றொரு மாதிரியிலிருந்து, காட்டுப்பன்றிகள் தோண்டும் மண்ணின் அளவை கணக்கிட்டு, எவ்வளவு மண்ணை தோண்டுகின்றன என்று தீர்மானித்தனர். மேலும், உள்ளூர் அளவில் ஆய்வுகளை மேற்கொண்டு, காட்டுப்பன்றிகளால், குறைந்த பட்ச மற்றும் அதிக பட்சமாக எவ்வளவு கார்பன் உமிழிவுகள் ஏற்படுகின்றன என்பதையும் கண்டறிந்தனர்.
ஆராய்ச்சியின் முடிவில், உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்படும் மண்ணின் அளவு 36,214 முதல் 123,517 சதுர அடி வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது, கிட்டத்தட்ட, தைவான் மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான நிலப்பரப்பு அளவைக் குறிக்கிறது. மண்ணுக்கு அடியில், மிகப்பெரிய அளவிலான கார்பன் இருப்பதால், இவை பூமியின் மேற்புரத்தில், கொஞ்சம் கசிந்தாலும் கூட, பருவநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஓசியானாவில் இந்த வகையான காட்டுப்பன்றிகள் அதிகம் இருப்பதால், அந்த சுற்றுப்பகுதியில் அதிக கார்பன் உமிழ்வு அதிகமாகக் காணப்படுகிறது என்று ஆய்வின் முடிவு தெரிவித்தது. அது மட்டுமின்றி, ஓசியானா பகுதிகளில், மண்ணுக்கு அடியில் அதிக கார்பன் இருப்பதாலும், காட்டுப்பன்றிகள் வெளியேற்றும் உமிழ்வின் அளவுகள் அதிகமாக இருக்கின்றன என்றும் விஞ்ஞானிகள் கூறினார்கள்.
காட்டுப்பன்றியின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டு போவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்தினர். இல்லையென்றால், கார்பன் உமிழ்வால் மிகப்பெரிய பருவநிலை சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தனர்.