கனடாவில் திறக்கப்படும் சர்வதேச எல்லைகள்: யார்யாருக்கு அனுமதி?

20 Jul,2021
 

 
 
 
கனடாவில் 16 மாதங்களுக்கு பிறகு சர்வதேச எல்லைகளை திறக்கப்படவுள்ளதாக அறைவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, கனடாவில் கடந்த மார்ச் 2020 முதல்சர்வதேச எல்லைகள் மூடப்பட்டது. அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மட்டுமே விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தது.
 
    
இந்நிலையில், கிட்டத்தட்ட 16 மாதங்களுக்குப் பிறகு, முதற்கட்டமாக வரும் ஆகஸ்ட் 9-ஆம் திகதி முதல் அமெரிக்கா உடனான சர்வதேச எல்லைகளை திறக்கவுள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
 
அன்று முதல் அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
 
அதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 7-ஆம் திகதி முதல் மற்ற நாடுகளுக்கு இடையான சர்வதேச போக்குவரத்து தடை நீக்கப்படவுள்ளது.
 
பயணிகள் தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
 
முழுமையாக தடுப்பூசி போடாத எந்த வெளிநாட்டு பயணிகளும் கனடாவுக்குள் நுழைய நிச்சயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
தற்போது, ​​ஃபைசர் / பயோஎன்டெக், மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளை மட்டுமே கனடா அங்கீகரித்துள்ளது, அதனால் இந்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சீனா மற்றும் ரஷ்ய தடுப்பூசிகளுக்கு கனடாவில் இதுவரை அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.
 
குறிப்பிடத்தக்க சலுகையாக, தடுப்பூசி போடப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் கனடாவுக்குள் நுழையும் 12 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டியதில்லை.
 
அதேசமயம் கனடாவுக்கு வரும் அனைத்து பயணிகளும், தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், கனடாவிற்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் அல்லது மூலக்கூறு சோதனை முடிவை காட்டவேண்டும்.
 
கனடாவுக்கு பயணிக்க இனி இது அவசியம்: மாற்றப்பட்ட விதிகள்!
 
முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கனேடியர்கள் வெளிநாடு சென்றுவிட்டு கனடா திரும்பும்போது இனி தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை. ஆனால், அவர்களுக்கு வேறு சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன... Dukovich, அவரது கணவர் Ted Read மற்றும் அவர்களது ஐந்து வயது பேத்தியான Ksenija Callaghan ஆகிய மூவரும் தங்கள் குடும்பத்தினரைக் காண்பதற்காக ஜூன் மாதத்தில் குரோவேஷியாவுக்கு சென்றிருந்தார்கள்.
 
    
மீண்டும் ஜூலை 7ஆம் திகதி கனடா திரும்புவதற்காக பாரீஸ் வந்தடைந்தார்கள் அவர்கள். Dukovichம், அவரது கணவரும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்ததாலும், குழந்தைக்கு ஐந்து வயதே ஆகியிருந்ததாலும், பிரான்சில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததற்கான ஆதாரத்தை காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
 
என்றாலும், அவர்கள் பாரீஸிலிருந்து கனடா செல்வதால் மீண்டும் கொரோனா சோதனை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதாவது, கனடாவுக்கு செல்வோர் அவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்தாலும், அவர்கள் பயணம் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பு செய்துகொண்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை அளித்தாகவேண்டும். இந்த பரிசோதனை ஜூலை 7 வரை இலவசமாக இருந்த நிலையில், தற்போது விதிகள் மாறிவிட்டன.
 
இனி பிரான்சிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியிலுள்ள நாடுகளுக்குச் செல்வோர் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் செலுத்தியாகவேண்டும்.
 
கனடாவுக்கு செல்வோர், தங்கள் பயணம் குறித்த தகவல்களை பயணம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு பெடரல் அரசுக்கு ArriveCAN ஆப் வழியாகவோ இணையத்தில் பதிவு செய்வது மூலமாகவோ தெரியப்படுத்தவேண்டும். அதில், முதல் மற்றும் இரண்டாவது டோஸ்தடுப்பூசி பெற்றுக்கொண்டது குறித்த விவரங்களை தனித்தனியே தெரியப்படுத்தவேண்டும்.
 
கனடாவுக்குள் நுழைந்ததும் என்னென்ன செய்யவேண்டும்?
 
தகவல்களை இணையத்தில் அப்லோட் செய்ததைத் தொடர்ந்து அந்த விவரங்களளைப் பெற்றுக்கொண்டதற்கு ஆதராமாக ஒரு ரெசீப்ட், மற்றும் கொரோனா பரிசோதனை முடிவுகள் ஆகியவை மின்னஞ்சல் மூலம் பயணிகளுக்கு வந்து சேரும். அவற்றை கனடாவுக்குள் நுழையும்போது கனேடிய எல்லை பாதுகாப்பு அலுவலரிடம் காட்டவேண்டும்.
 
குழந்தைகளுடன் பயணித்தல்
 
ஜூன் 9ஆம் திகதி, பார்சிலோனாவிலிருந்து Shawn Plancke என்ற கனேடியர், தன் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் கனடாவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தார்.
 
தடுப்பூசி பெறாதவர்கள் அல்லது கனடாவால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள், கனடா வந்ததும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
 
விமானம் வாயிலாக வருபவர்கள் அந்த 14 நாட்களில் மூன்று நாட்களை அரசு நியமித்துள்ள ஹொட்டலிலும், மீதி நாட்களை தங்கள் வீட்டிலும் தனிமைப்படுத்தலில் செலவிடவேண்டும்.
 
அதே நேரத்தில், பெற்றோருடன் வரும் 18 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள், தங்கள் பெற்றோருடன் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டாலும், அவர்கள் தங்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும், பெற்றோர் மட்டும் வெளியே செல்லலாம்.
 
ஆக, Dukovichம் அவரது கணவரும் ஆனாலும் சரி, Shawn Plancke ஆனாலும் சரி, பிள்ளைகள் தனிமைப்படுத்தப்படவேண்டும், பெற்றோருக்கோ வெளியில் செல்ல அனுமதி உண்டு என்கின்றன புதிய விதிகள்!

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies