நீரிழிவு நோயை அடியோடு விரட்டும் பானம்!
23 Jun,2021
.
சங்க காலத்தில் வாழ்ந்த மகளிர் கோடை காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடிய நுங்கின் நீரும், கரும்பின் இனிய சாறும், இளநீரும் கலந்து தயாரிக்கப்பட்ட ஒரு வகை பானத்தை அருந்தியிருக்கின்றனர்.
தேவையான பொருட்கள்
பனை நுங்கு - 5
கம்புச்சாறு - 100மி.லி
இளநீர் - 1
செய்முறை
பனை நுங்கை ஓட்டைப் போட்டு, அதன் நீரைத் தனியே எடுக்கவும். அதனுடன் சீவி உடைத்த இளநீரைச் சேர்க்கவும். இனிப்புச் சுவை, சீரணச் சக்தியை தரக் கூடிய கரும்புச் சாற்றை மிக்ஸ் செய்து, தனியே எடுத்து வைத்த நுங்கின் தோலைச் சீவி பானத்துடன் கலந்து இனிதாகப் பருகவும். சுவையான கோடை கால முந்நீர் பானம் ரெடி.
குறிப்பு
சங்க காலத்தில் சர்க்கரை, நாட்டுச்சர்க்கரை பயன்பாட்டில் இல்லை. சங்க காலத்தில் கரும்பாளை நிறைய இருந்தது. காளை மாட்டைக் கொண்டு செக்கில் கரும்பைப் பிழிந்து ஆளையில் கரும்புச் சாற்றை எடுத்துள்ளனர் என்பதை சங்க இலக்கிய பாடல்கள் மூலம் அறியலாம்.
நம் சுவைக்கு ஏற்ப இஞ்சிச் சாறு & எலுமிச்சை சாற்றைச் சேர்த்து, சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து ஜில்லென்று குடிக்கலாம்.
பயன்கள்
இயற்கை அன்னை கொடுத்த நுங்கிலும், இளநீரிலும் உடலுக்குப் பயன்கள் தரக்கூடிய கால்சியம், மெக்னீசியம், பாஸ்பொரஸ், பொட்டாசியம், சோடியம், விட்டமின்கள் & மினரல்கள் உள்ளது. வறத்தேங்காயின் நீரைவிட இளநீரில் சத்துக்கள் அதிகம் உள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இளநீரையும் நுங்கையும் சாப்பிடலாம். ஆனால் கரும்புச்சாற்றைத் தவிர்க்கவும். உடல் சூட்டைக் குறைக்க கூடிய அனைத்து தாதுக்கள் & மினரல்கள் நுங்கிலும் & இளநீரிலும் உள்ளது.