லண்டனில் ஜூலை 19 வரை தடை நீடிப்பு
12 Jun,2021
லண்டனில் ஜூன் 21 தடைகளை விலக்க இருந்த பிரதமர் ஜோன்சன், அதனை ஜூலை மாதம் 19 வரை திடீரென தள்ளிப் போட்டுள்ளார், காரணம் இந்திய உரு மாறிய வைரஸ் தான். கடந்த 24 மணி நேரத்தில், 8,125 பேருக்கு இந்திய உரு மாறிய கொரோனா தொற்றியுள்ளதோடு. இது நாள் வரை இல்லாமல் 40 சத விகிதமானவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற தரவும் கூடவே வெளியாகியுள்ளது. முன்னர் இந்திய உரு மாறிய கொரோனா தொற்றிய நபர்கள், 14 நாட்களில் குணமடைவதாக கூறப்பட்டது. ஆனால் தரவுகளின் படி, 40% சத விகிதமானவர்கள் வைத்திய சாலையில் அனுமதியாகி வருகிறார்கள். இதேவேளை இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதைஸ அடுத்தேஸ
பிரதமர் ஜோன்சன் இந்த திடீர் முடிவை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சொல்லப் போனால் இந்த ஜூலை 19 ம் திகதி கூட, முழு தடைகளும் விலகாது. மேலும் அதனை நீடிக்க வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்திய உரு மாறிய கொரோனா, 2 தடுப்பூசிகள் எடுத்த நபர்களையும் தாக்குகிறது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. எனவே தமிழர்களே ஜாக்கிரதை .