பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்திய 50 வயது பெண்!
09 May,2021
பிரித்தானியாவில் 50 வயதாகும் பெண் ஒருவர் தனது சிறு வயதிலிஇருந்து 50-க்கும் மேற்பட்ட முறை வேற்று கிரகத்துக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இங்கிலாந்தில் மேற்கு யார்க்ஷைர் மாகாணத்தில் உள்ள ப்ராட்ஃபோர்டு நகரத்தைச் சேர்ந்தவர் பவுலா ஸ்மித் (Paula Smith). இவர் போக்குவரத்து துறையில் வேலைபார்த்து வருகிறார்.
அவர் தனது வாழ்நாளில் 52 முறை வேற்றுகிரக வாசிகளால் கடத்தப்பட்டு அவர்களது விண்கலத்தில் (UFO) பயணித்துள்ளதாகவும் கூறிவருகிறார்.
முதல் முறையாக தனது குழந்தை பருவத்தில் கடத்தப்பதாக கூறுகிறார். கடத்தப்பட்டபோது, வேற்றுகிரக வாசிகள் தன்னிடம் பூமியில் மனிதர்களிடம் இல்லாத ஒரு தொழிநுட்பத்தை காண்பித்ததாக கூறுகிறார்.
அவர்கள் (வேற்றுகிரக வாசிகள்) தன்னிடம் பூமியின் அழிவைக் குறிக்கும் சில புகைப்பட தொகுப்பை காட்சிப்படுத்தியதாக கூறியுள்ளார்.
மேலும், அவர் பார்த்ததாக கூறப்படும் 'வெள்ளி நிற ஏலியனை' வரைந்து காட்டியுள்ளார்.
பவுலா முதல் முறையாக 1982-ஆம் ஆண்டு அவர்களின் பூமராங் போன்ற விண்வெளி கப்பலை பார்த்ததாகவும், அவர் சில முறை கடத்தப்பட்டு மீண்டும் பூமிக்கு அனுப்பி வைக்கும்போது, தனது கைகளில் சில முத்திரைகள் குத்தப்பட்டதாகவும் கூறுகிறார்.
தனது அனுபவங்களை யாரிடமும் இதுவரை கூறியது இல்லை என கூறிய பவுலா, இதனை வெளியே சொன்னால் தன்னை பைத்தியம் என்று நினைப்பார்கள் என தெரியும் என்கிறார்.
மேலும், தன்னைப் போல் மில்லியன் கணக்கானவர்கள் இல்லை என்றாலும் குறைந்தது ஆயிரக் கணக்கானவர்கள் இதே அனுபவங்களை கொண்டிருப்பார்கள் எனவும் கூறுகிறார்.
இவர் கூறிவரும் விடயங்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.