சாட் அதிபர் படுகொலை
21 Apr,2021
என் ஜமேனா:சாட் நாட்டின் அதிபராக இருந்த இட்ரிஸ் டெபி இட்னோ, அந்நாட்டின் கிளர்ச்சியாளர்களால் நேற்று படுகொலை செய்யப்பட்டார்.
மத்திய ஆப்ரிக்க நாடான சாட்டில், 30 ஆண்டுகளுக்கும் மேல் அதிபராக இருந்தவர் இட்ரிஸ் டெபி இட்னோ. இவர், அந்நாட்டின் கிளர்ச்சியாளர்களால்படுகொலை செய்யப்பட்டதாக, ராணுவ அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
சாட் அதிபர் தேர்தல், 11ம் தேதி நடந்தது; இதில் இட்ரிஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், அவர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த நாட்டின் மேற்கு பகுதியில், அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது, ராணுவம் தாக்குதல் நடத்துகிறது.