சிறுவனை விழுங்கிய பாரிய முதலை: இந்தோனேஷியாவில் சம்பவம் (வீடியோ)
09 Mar,2021
எட்டு வயதான சிறுவனை முதலையொன்று விழுங்கிய சம்பவம் இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தோனேஷியாவின் போர்னியோ தீவில், கிழக்கு கலிமன்தன் மாகாணத்தில் முதலைகள் நிறைந்த ஆறு ஒன்றில், கடந்த புதன்கிழமை (03) 8 வயதான சிறுவனும் அவனின் இளைய சகோதரனும் நீந்திக்கொண்டிருந்தனர்..
அப்போது 8 வயதான சிறுவனை முதலை தாக்கியதுடன் அவனை விழுங்கியதாக மீட்பு முகவரக அதிகாரி ஒக்டாவியன்டோ தெரிவித்துள்ளார்.
இச்சிறுவர்களின் தந்தை உடனடியாக ஆற்றில் பாய்ந்து முதலையை துரத்திச் சென்றதுடன் அதை தனது கையால் தாக்கினார். எனினும், அம்முதலை தப்பிச் சென்றது.
மறுநாள் வியாழக்கிழமை கிராமவாசிகள் மேற்படி 6 மீற்றர் (19 அடி) நீளமான முதலயைக் கண்டு அதை பிடித்ததுடன், அதன் வயிற்றை வெட்டிப்பார்த்தபோது, உயிரிழந்த சிறுவனின் உடல் காணப்பட்டுள்ளது.
மேற்படி சிறுவர்கள் குளிப்பதற்கும் சமையலுக்காக நீர் எடுத்து வருவதற்கும் ஆற்றுக்குச் வழக்கம் என எனவும் மீட்பு முகவரக அதிகாரி ஒக்டாவியன்டோ தெரிவித்துள்ளார்