ஊரடங்கை மேலும் நீடிக்க ஜேர்மனிய அரசாங்கம் தீர்மானம்? வில் அதிகரித்து வரும் கொரோனா
03 Mar,2021
ஊரடங்கு உத்தரவினை மேலும் நீடிக்க ஜேர்மனிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் கொரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஊரடங்கை நீடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மாகாண ஆளுநர்களுடன் அஞ்சலா மெர்கல் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 இலட்சத்தினை நெருங்குகின்றது!
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா தொடர்ந்தும் ஐந்தாவது இடத்தில் நீடிக்கின்றது.
இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 41 இலட்சத்து 88 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 06 ஆயிரத்து 391 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் காரணமாக அங்கு ஒரே நாளில் 343 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது.