கட்டுப்பாடுகளின்றி கொரோனத் தடுப்பு ஊசி மட்டும் கொரோனாவைத் தடுக்காது -
25 Feb,2021
கடுமையான மேலதிக சுகாதாரக் கட்டுப்பாடுகளின்றி, வெறும் கொரோனாத் தடுப்பு ஊசி, கொரேனா பரவுவதையோ, மருத்துவமனைகள் கொரேனா நோயாளிகளால் நிரம்புவதையோ தடுத்து விடாது என, பிரான்சின் பஸ்தர் ஆய்வு நிறுவனம் (institut pasteur) தெரிவித்துள்ளது. முதலாம் தொற்றலையில் வைத்தியசாலைகள் நிரம்பிவழிந்தது போல் இப்போதும் நிகழாமல் இருக்க, கடுமையான கட்டுப்பாடுகள் தேவையென பஸ்தர் நிறுவனம் எச்சரித்துள்ளது.
நாட்டில் அதியுச்சத் தொற்று நிலவி வரும் நிலையில், அரசாங்கம் உடனடியாக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஸ்தர் நிறுவனம் அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கி உள்ளது.
இன்று கொரோனத் தொற்று 30.000 இனைத் தாண்டி உள்ள நிலையில் இந்த எச்சரிக்கை மிகவும் அத்தியாவசியமானதாக உள்ளது.