நீங்கள் ஒரு பக்கா டீடோட்டலர். இருந்தும் உங்கள் உடல் ஆல்கஹாலை உற்பத்தி செய்கிறது என்றால் அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும். உங்களின் இந்த நிலைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பீர்களா...? நீங்கள் எப்படியோ, அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது உடல் தானாகவே ஆல்கஹாலை உற்பத்தி செய்வதால் இத்தகைய வினோதமான முடிவை எடுக்க துணித்திருக்கிறார்.
ஒரு அவுன்ஸ் ஆல்கஹாலை கூட குடிக்காமல் குடிபோதையில் ஒருவரால் தள்ளாடமுடியுமா? ஆட்டோ ப்ரூவரி சிஸ்டம் / சிண்ட்ரோம் (Auto-Brewery System/Syndrome (ABS)) என்று அழைக்கப்படும் மிக அரிதான நோய் உங்களுக்கு இருந்தால், குடிக்காமலே தள்ளாடுவீர்கள். அமெரிக்காவில் உள்ள ஒரு பெண், தான் குடிக்காமலே தனது உடல் ஆல்கஹாலை உற்பத்தி செய்கிறது என்று கூறியுள்ளார். இந்த சிக்கலை சரிசெய்ய, தான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்யவுள்ளதாக கூறியதுதான் இப்போது தலைப்பு செய்தியில் இடம்பிடித்துள்ளது. கனெக்டிகட்டைச் சேர்ந்த 38 வயதான சாரா லெபெப்வ்ரே ஒரு டீடோட்டலர், அதாவது ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் சார்ந்த பிற பொருட்களை தொட்டுக்கூட பார்க்காதவர்.
இருந்தும்கூட டாக்டர்கள் பெரும்பாலும் சாராவை குடிபோதையில் இருப்பதாக கருதுகிறார்கள். ABS காரணமாக, அந்தப்பெண்ணின் வயிற்றில் உள்ள ஈஸ்டு அதிக அளவு எத்தனாலாக மாறுகிறது. பின்னர் இது சாராவின் இரத்தத்திற்கு பயணிக்கிறது, இதனால் அவர் மது அருந்தியதைப் போலவே, போதைக்கு ஆளாகிறார். இந்த நிலை அவரது உயிருக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக நிறுத்தி டெஸ்ட் செய்துபார்க்கும்போது, மதுவிற்கான சட்ட வரம்பை விட சாரா உடலில் ஆறு மடங்கு அதிகமாக ஆல்கஹால் கண்டறியப்பட்டது!.
இது ஏன் தனக்கு நடக்கிறது என்று ஆரம்பத்தில் கேர்லஸ்ஸாக, இருந்தவருக்கு உண்மை இப்போது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இதை கண்டுபிடித்த மருத்துவர்கள், சாராவுக்கு பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சையைப் (anti-fungal treatment) அளித்து வருகின்றனர். ஆனால் இந்த சிகிச்சையோ ஒரு வெட்டு மீது ஒரு பேண்ட்-எயிட் போன்றது, இந்த சிக்கலுக்கு ஆப்பரேஷன் தேவை. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பெறும் வரை இந்த மருந்துகள் சாராவை கொஞ்சம் பெட்டராக வைத்திருக்கும். "இந்த புதிய மருந்து வேலை செய்யவில்லை என்றால், நான் இறக்கப்போகிறேன்," என்று சாரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சாராவின் மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த சிக்கல் ABS காரணமாக இல்லை என்றும் ABS தயாரிக்கும் நொதியே இந்த பிரச்சினையை தீவிரமாக்குகிறது என கூறியுள்ளனர். மேலும் என்னென்னமோ செய்து பார்த்தும் அவரது இரத்த ஆல்கஹால் அளவு எப்போதும் அதிகமாகவே உள்ளதால் இரண்டு மருத்துவமனைகள் அவரை ட்ரான்ஸ்பிளான்ட் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளன. சாரா, தனது 23 வயதில் தனக்கு ஏதோ ஏற்பட்டிருப்பதை அவர் முதலில் கவனித்தார். நண்பர்களுடன் ஓரிரு பானங்களை அருந்திய பிறகு, உறைபனியில் வீடு வந்துசேர்ந்தார். அப்போது சாராவை அவரது நண்பர்கள் வீட்டில் ட்ராப் செய்துள்ளார், ஆனால் அப்போது சாரா முற்றிலும் நன்றாகவே இருந்துள்ளார்.
அதன் பிறகு அடிக்கடி சாரா, வெளியே சென்று வீடு திரும்பும்போது குடிபோதையில் இருப்பதைப் போலவும், சில சமயங்களில் கீழே விழுந்துகிடக்கவும் செய்தார். நிலைமை மோசமான பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரது கல்லீரலுக்கு சர்க்கரை அடிப்படையிலான சிகிச்சை அளிக்கப்பட்டதுதான் ABS மேலும் அதிகரிக்க காரணமாயிருந்தது. பேஸ்மென்ட்டில் விழுந்த கிடந்த சாராவை கண்ட, கணவர் ஆண்ட் சாராவை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்ள ஒரு நர்ஸ்ஸை அப்பாய்ண்ட் செய்தார்."சாரா எங்கே விழப்போகிறாள், அல்லது அவள் தன்னை எப்படி காயப்படுத்திக் கொள்ளப்போகிறாள் என்று நான் உண்மையில் கவலைகொள்கிறேன். இது ஒரு வாழ்க்கை கனவு போன்றது,” என்கிறார் அவரது கணவர். இவர்களின் குழந்தைகள் இப்போது தங்கள் “புதிய இயல்பான” வாழ்க்கைக்கு பழகிவிட்டதாக அவர் கூறுகிறார், ஆனால் அது நிச்சயமாக அனைவரையும் பாதிக்கிறது. இது ABS தான் என்பதைக் கண்டுபிடித்த பிறகு, அவர் ஒரு புதிய கல்லீரலை ஆபரேஷன் செய்துக்கொண்டு சிக்கலிலிருந்து விடுபட எண்ணினார்.
சாராவுக்கு மஞ்சள் காமாலை உள்ளது. மேலும் கல்லீரல் சேதமடைந்ததால் மருத்துவமனையில் இருக்கிறார். ஆனால் அவரது இரத்த ஆல்கஹால் இவ்வளவு அதிகமாக இருக்கும் வரை எந்த மருத்துவமனையிலும் சாராவுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது. ஒரு குழந்தைக்கு தேவையான பலவிதமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக ஆண்ட் நம்புகிறார். எது எப்படியோ இதுபோன்று மோசமான நிலை யாருக்கும் வரக்கூடாது.