புத்தாண்டை கொண்டாட சென்ற சிறுமிகளுக்கு நடந்த கொடூரம்!
03 Jan,2021
அவுஸ்திரேலியாவில் புதிதாக சந்தித்த இளம் ஆண்களை நம்பி ஹொட்டல் அறைக்கு புத்தாண்டை கொண்டாட சென்ற மூன்று சிறுமிகளுக்கு நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டை கொண்டாடுவதற்காக வியாழக்கிழமை மாலை அவுஸ்திரேலியாவில் உள்ள Surfers Paradise ரிசார்ட்டில் உள்ள கடற்கரைக்கு சென்ற 15 வயது மிக்க மூன்று சிறுமிகள், அங்கு 22 வயது மிக்க மூன்று ஆண்களை சந்தித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் புதிதாக சந்தித்த இளம் ஆண்களை நம்பி ஹொட்டல் அறைக்கு புத்தாண்டை கொண்டாட சென்ற மூன்று சிறுமிகளுக்கு நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டை கொண்டாடுவதற்காக வியாழக்கிழமை மாலை அவுஸ்திரேலியாவில் உள்ள Surfers Paradise ரிசார்ட்டில் உள்ள கடற்கரைக்கு சென்ற 15 வயது மிக்க மூன்று சிறுமிகள், அங்கு 22 வயது மிக்க மூன்று ஆண்களை சந்தித்துள்ளனர்.
சற்று நேரத்தில் நண்பர்களாக பேசத் தொடங்கிய அவர்கள், மூன்று ஆண்களையும் நம்பி, அதே ரிசார்ட்டில் இருந்த அவர்களது அறைக்கு புத்தாண்டைக் கொண்டாட சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மதுபானங்களுடன் பார்ட்டி செய்ததாகக் கூறப்படுகிறது.
வெகு நேரம் கழித்து, திடீரென அந்த மூன்று சிறுமிகளில் ஒருவர், அரைகுறையான ஆடையுடன், பதற்றமான நிலையில் அறையை விட்டு வெளியே ஓடிச்சென்று அங்கிருந்தவர்களின் உதவியைக் கேட்டு, காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
விரைவாக சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ், அவர்கள் இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது மற்ற இரண்டு பெண்களும் கடுமையாக தாக்கப்பட்டு கிடந்துள்ளனர். உடனடியாக, அவர்கள் மருத்துவ உதைவிக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் அங்கிருந்த இளைஞர்கள் மூவரையும் பொலிஸ் கைது செய்தது.
விசாரணையில், அவர்களில் 2 சிறுமிகள் கடுமையாக தாக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது