கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவருக்கு ஒவ்வாமை!
30 Dec,2020
கிரீஸில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை தற்போது பல்வேறு நாடுகள் ஆரம்பித்துள்ளன.
பிரித்தானியா, அமெரிக்கா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிரீஸில் கொரோனாவுக்கு எதிரான பைசர் தடுப்பூசிக்கு அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிலையில், அங்குள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் ஒருவருக்கு சிறிய அளவில் ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் எனினும் சிகிச்சைக்கு பின் அது சரி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.