60,000 ஆயிரம் ஆண்டு !ராஜாவாக வாழும் சோழர்களின் பாதுகாவலர்கள்
26 Dec,2020
கடவுள் என்பவர் இல்லை?உருவ வழிபாடே இல்லாமல் தனிக்காட்டு இராஐாவாக 60,000 ஆயிரம் வருடங்கள், எந்த நாட்டிற்கும் அடிபணியாமல் தனித்தீவீல் நிம்மதியாக வாழும் சோழர்களின் பாதுகாவளராக இருந்த வடக்கு சென்டினல தீவு மக்கள் தான் இவர்கள் என்றால் நம்புவீர்களா ?
இது இந்தியாவை சேர்ந்த ஒரு பகுதி என்று பல இந்தியர்களுக்கே தெரியாது. இது சென்டினல்கள் என்ற பழங்குடி மக்கள் வாழும் வடக்கு சென்டினல் தீவு. இங்கே வாழும் மக்கள் கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளுக்கும் மேலாக கற்கால மனிதர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்று Anthropological Survey of India மற்றும் இங்கே சென்று பார்வையிட்ட வெவ்வேறு குழுக்களால் நம்பப்படுகிறது. 2004 சுனாமிக்கு பிறகு நடந்த சர்வேக்களில் இங்கே வாழும் மக்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.
சரி, விஷயத்திற்கு வருவோம். நாம் கடவுள் என்று பெயரிட்ட, வடிவமைத்த, உருவாக்கிய, உருவாக்கிக்கொண்டிருக்கிற அத்தனை கடவுள்களைப்பற்றியும் இந்த மக்களுக்கு ஒரு சுக்கும் தெரியாது. 60,000 ஆண்டுகள் என்பது நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு தனியாக ஒரு குழுவாக வாழும் மிகப்பெரிய சாதனை. 100 நாள் ஒரு வீட்டில் போட்டு அடைத்து வைத்தாலே பாதி மென்டலாகிவிடும் தற்கால மனிதர்கள். அறுபதாயிரம் ஆண்டுகள் தனியே ஒரு குழுவாக இருந்து இந்த உலகம் கண்ட எத்தனையோ அதிசயங்களையும் அசிங்கங்களையும் கொலைகளையும் கொள்கைகளையும் ஞானத்தையும் ஆன்மீகத்தைப் பற்றியும் அறவே அறியாத மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இயற்கை அறிவில் சுனாமி பற்றி மட்டுமல்ல, பல விஷயங்களைப்பற்றி தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் இத்தனை ஆண்டுகள் ஒரு புத்தகம் கூட எழுதாமல் படிக்காமல் தன் வம்சாவழியினரை காக்கும் அறிவை கொடுக்க இயலாது. இந்த அறிவில் முக்கியமான ஒன்று இவர்கள் யாரும் இயற்கையின் விதியை மீறாமல் அப்படியே இயற்கையோடு வாழ்வது. தங்கள் தீவைவிட்டு பெரும்பாலும் செல்லாதவர்கள். அப்படியே சென்றாலும் மற்ற குடியினரிடம் ஏதோ ஒரு பொருளையோ அல்லது பண்டத்தையோ மாற்றுவதற்காக மட்டுமே சென்றிருக்கவேண்டுமே ஒழிய திருட்டோ கற்பழிப்போ எதையும் செய்யாதிருந்திருக்க வேண்டும். தாங்கள் செய்த சிறிய படகுகள் மூலம் பயணித்து இருக்கிறார்கள்.
இவர்கள் ஆயரிக்கணக்கான இயற்கை சீற்றங்களை நேரில் சந்தித்த அனுபவம் இருந்ததால் சுனாமி எல்லாம் ஒரு matter-ஏ இல்லை. நாகரிகம் என்ற பெயரில் மக்கள் இயற்கையை விட்டு விட்டு செயற்கையான விஷயங்களை நாடி நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். சோழர்கள் இந்த தீவுக்கு சென்றதாக பதிவுகள் உள்ளதாக இந்திய குறிப்புகள் தெரிவிக்கிறது. இவர்களில் சிலர் சோழ மன்னனின் பாதுகாவலர்களாகவும் இருந்துள்ளார்கள்.