பிள்ளையை முதலில் தூக்கில் போட்டு கொலை: பின்னர் மனைவியை கத்தியால் குத்தி கொலை: பிணங்களோடு 2 வாரம்
13 Oct,2020
கடந்த அக்டோபர் 6ம் திகதி லண்டனை உலுக்கிய கொலை தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. 42 வயதாகும் குகா சிவராஜ் தனது 3வயது மகன் கைலாஷை முதலில் தூக்கில் போட்டு கொலை செய்துள்ளார் என்றும். பின்னர் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு. பிணங்களோடு 2 வாரம் இருந்துள்ளார். அவர்களது நண்பர்கள் பலர் அவரை தொடர்பு கொள்ள முற்பட்டும் முடியவில்லை.
பின்னர் உறவினர் ஒருவர் நேரடியாகச் சென்று வீட்டு கதவை தட்டியுள்ளார். ஆனால் ஒரு பதிலும் இல்லை. இதனை அடுத்து அன் நபர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும் ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னர் கூச்சல் சத்தம் கேட்டதாக அயலவர்கள் கூறியிருந்த புகார். அனைத்தையும் வைத்தே பொலிசார் அங்கே சென்று அவர்களது வீட்டு கதவை உடைக்க முயற்ச்சி செய்தவேளை. குகா சிவராஜ் தன்னை தானே கத்தியால் குத்தி நிலத்தில் சரிந்தார் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இவர் இரவு வேளைகளில் கூச்சலிடுவதும் அந்த 2 வாரங்களாக இடம்பெற்று வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.