செல்போன் தொடுதிரையில் படரும் கொரோனா வைரஸ் நான்கு வாரங்கள் வரை உயிர்வாழும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால் செல்போனை பயன்படுத்துபவருக்கு அது பரவும் வாய்ப்பும் அதிகமாகும்.வங்கிகள், ஏடிஎம்களில் பெறப்படும் ரொக்கப்பணம், கண்ணாடி போன்ற பொருட்களில் கொரோனா வைரஸ் 28 நாட்களுக்குக் கூட நீடித்திருக்கும் என்று ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மென்பொருட்கள் மீது படரும் வைரஸ் நீண்ட காலம் நீடித்திருக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் சார்ஸ், கோவ்-2 ஆயுளை மூன்று வெப்பநிலையில் சோதித்தனர். வெப்பம் அதிகரித்தால் கொரோனா வைரஸ் உயிர்வாழும் விகிதங்கள் குறைந்து உள்ளன என்று அது திங்களன்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ், ரூபாய் நோட்டுகள் மற்றும் மொபைல்கள் போன்ற பொருட்களில் 28 நாட்கள் வரை குளிர்ந்த, இருண்ட நிலையில் வாழ முடியும் என்று ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் 20 டிகிரி செல்சியஸ் (68 டிகிரி பாரன்ஹீட்) இல், சார்ஸ் , கோவ்-2 மென்மையான மேற்பரப்பில் "மொபைல் போன் திரைகளைப் போல" கண்ணாடி, எஃகு மற்றும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளில் 28 நாட்கள் உயிர் பிழைத்திருப்பதைக் கண்டறிந்தனர்
30 டிகிரி செல்சியஸில் (86 டிகிரி பாரன்ஹீட்), உயிர்வாழும் வீதம் ஏழு நாட்களாகக் குறைந்தது 40 டிகிரி செல்சியஸில் (104 டிகிரி பாரன்ஹீட்) வெறும் 24 மணி நேரமாக குறைந்தது.
பருத்தி போன்ற நுண்ணிய மேற்பரப்பில் இந்த வைரஸ் குறுகிய காலத்திற்கே உயிர்வாழும்.குறைந்த வெப்பநிலையில் 14 நாட்கள் வரை மற்றும் அதிகபட்சமாக 16 மணி நேரத்திற்கும் குறைவாக உயிர்வாழும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
முந்தைய ஆய்வுகளை விட இதகொரோனா வைரசின் வாழ் நாள் கணிசமாக நீண்டு உள்ளது", இதற்கு முன் நோய் நுண்ணிய மேற்பரப்பில் நான்கு நாட்கள் வரை உயிர்வாழக்கூடும் என்று கண்டறியப்பட்டது.
ஆஸ்திரேலிய நோய் எதிர்ப்பு மையத்தின இயக்குனர் ட்ரெவர் ட்ரூ கூறுகையில், வைரஸின் மாதிரிகளை சோதனை செய்வதற்கு முன்பு வெவ்வேறு பொருட்களில் அதன் வாழ்நாளை கணடற்நிதோம். "மிகவும் உணர்திறன்" முறையைப் பயன்படுத்தி உயிரணு கலாச்சாரங்களை பாதிக்கக்கூடிய நேரடி வைரஸின் தடயங்களைக் கண்டறிந்தோம்
"வைரஸின் அளவு யாரையாவது தொற்றும் திறன் கொண்டதாக இருக்கும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை" .
ஒரு நபர் "இந்த பொருட்களைப் கவனக்குறைவாக தொட்டு பின்னர் உங்கள் கைகளை நக்கினால் அல்லது உங்கள் கண்களையோ அல்லது மூக்கையோ தொட்டால், அவை மாசுபட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் நீங்கள் பாதிக்கப்படலாம்" என்று அவர் மேலும் கூறினார்.