பணத்துக்காக 14 வயது சிறுவன் செய்த செயல்: அதிர்ந்துபோன போலீசார்!
09 Oct,2020
தான் கடத்தப்படதாக 14 வயது சிறுவன் ஒருவன் தந்தையிடன் பணம் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் ட்யூசன் வகுப்புக்காக சென்றபோது மாயமாகியுள்ளான். இதனால், சிறுவனின் தந்தைக்கு போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் சிறுவனை தாங்கள் பிடித்து வைத்துள்ளதாகவும், ரூ.10 லட்சம் கொடுத்தால் தான் சிறுவனை விடுவிப்போம் என்றும் கூறியுள்ளனர்.
தான் கடத்தப்படதாக 14 வயது சிறுவன் ஒருவன் தந்தையிடன் பணம் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் ட்யூசன் வகுப்புக்காக சென்றபோது மாயமாகியுள்ளான். இதனால், சிறுவனின் தந்தைக்கு போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் சிறுவனை தாங்கள் பிடித்து வைத்துள்ளதாகவும், ரூ.10 லட்சம் கொடுத்தால் தான் சிறுவனை விடுவிப்போம் என்றும் கூறியுள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, தேடுதல் வேட்டை மேற்கொண்ட பொலிசார் சிறுவன் ட்யூசன் செல்லும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் அவனை யாரும் கடத்தியதாக தெரியவில்லை.
மேலும், மிரட்டல் கால் வந்த எண்ணை ட்ரேஸ் செய்ததில் சிறுவனே மற்றொரு நபருடன் சேர்ந்து தந்தையிடம் பணம் பறிப்பதற்காக கடத்தல் நாடகம் செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் பொலிசாரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.