வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கை, கால்களை கட்டிப்போட்டு உயிரோடு எரித்த கும்பல்!
23 Sep,2020
இந்தியாவில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் பர்சோலி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் சிங். இவர் குடும்பத்துக்கும் கன்வர் சிங் குடும்பத்துக்கும் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நடந்த சண்டையில் கன்வர் சிங் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பலருக்கும் காயம் ஏற்பட்டது, இதையடுத்து பிரதீப்பை பொலிசார் கைது செய்தனர்.
இந்தியாவில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் பர்சோலி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் சிங். இவர் குடும்பத்துக்கும் கன்வர் சிங் குடும்பத்துக்கும் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நடந்த சண்டையில் கன்வர் சிங் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பலருக்கும் காயம் ஏற்பட்டது, இதையடுத்து பிரதீப்பை பொலிசார் கைது செய்தனர்.
இதிலிருந்தே பிரதீப் குடும்பத்தாரை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கன்வர் உறவினர்கள் இருந்தனர். இந்த சூழலில் சிறையில் இருக்கும் பிரதீப்பை காண இரு தினங்களுக்கு முன்னர் அவர் மனைவி சென்றார். அப்போது அவர்களின் மகள் ஷரதா வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் வீட்டு வாசலில் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த போது அங்கு மூன்று பேர் வந்தனர்.
அவர்கள் ஷரதாவின் கை மற்றும் கால்களை கட்டி போட்டு உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தனர். இதன்பின்னர் வலியால் அலறிய ஷரதாவின் நிலையை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்த நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷரதா உயிரிழந்தார்.
இறப்பதற்கு முன்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில் தன்னை மூன்று பேர் எவ்வாறு கொடுமைப்படுத்தி உயிரோடு எரித்தனர் என்பதை கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.