உம்ரா யாத்திரை மேற்கொள்ள அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்படு்ம் சவுதி அரேபியா அறிவிப்பு
23 Sep,2020
உம்ரா என்பது மக்கா மற்றும் மதீனாவுக்கு இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரை ஆகும். இது ஆண்டின் அனைத்து நாட்களிலும் மேற்கொள்ளப்படுகிறது, கடந்த ஆண்டு 1.9 கோடி மக்கள் உம்ரா யாத்திரை வந்திருந்தனர். ஆனால், சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் மார்ச் மாதத்தில் சவுதி அரேபியா உம்ரா யாத்திரையை நிறுத்தி வைத்தது.
சவுதி அரேபியாவில் மொத்தம் 3,30,798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 4,542 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது அக்டோபர் 4 ஆம் தேதி முதல் உள்நாட்டில் வசிக்கும் 6,000 குடிமக்கள் தினசரி உம்ரா செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டியது கட்டாயம் என்றும் சவுதி அரசு அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகு தினசரி 20,000 பேர் உம்ரா யாத்திரையை மேற்கொள்ளலாம் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு தற்போது 30 சதவீதத்தினருக்கு (தினசரி 6000 பேர்) மட்டுமே அனுமதி கொடுத்திருக்கிறது என கூறப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை அக்டோபர் 18ஆம் தேதிக்குள் 75 சதவீத அளவுக்கு அதிகரிக்கப்படலாம்.
தொற்றுநோய் அபாயங்கள் முடியும் வரை உம்ரா யாத்திரை குறித்து சவுதி அரேபியா சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு, ஹஜ் யாத்திரைக்கு வரையறை விதிக்கப்பட்டது. வழக்கமாக ஆண்டுதோறும் கோடி கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் உலகின் மிகப் பெரிய யாத்திரையில் இந்த ஆண்டு சில ஆயிரம்பேமட்டுமே கலந்துக் கொண்டனர்.
ஹஜ், உம்ரா போன்ற புனித யாத்திரையில் சசவுதி அரேபியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 12 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது என அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.