ஒரு காமக் கொடூரன்: பெண்களை சீரழித்தது எப்படி ?
12 Sep,2020
போதை மாத்திரை கலந்து கொடுத்த குளிர் பாணத்தை நான் குடித்தேன். அதனால் மயக்கம் அடைந்தேன். என் ஆடைகளை விலக்கி என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருந்து . அதனை வெளியிட்டு விடுவேன் என்று கூறியே என்னை கடந்த 1 வருடமாக அனுபவித்து வருகிறார் இந்த கனேஷ் குமார் என்று ஒரு பெண் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். குழந்தை முகத்தோடு, மீசை கூட சரியாக வளராத இந்த கனேஷ் குமார் சிறை காவலராக உள்ளார்.
இதில் கொடுமை என்னவென்றால், சிறை காவலர்கள் தங்கும் விடுதிக்கே பெண்களை அழைத்துச் சென்று இவர் கற்பழித்துள்ளார் என்பது தான். கடந்த ஆகஸ்ட் 28 அன்று, 20 மேலும் ஒரு 20 வயது இளம் பெண், வேலூரில் உள்ள மகளீர் காவல் நிலையம் வந்து கதறி அழுதுள்ளார். அவரது நிர்வாணம் புகைப்படங்களும் இந்த கனேஷ் குமாரிடம் உள்ளதாம். இது போல பல பெண்களுக்கு போதை மாத்திரை கொடுத்து.
அவர்களை முதலில் மயக்கி பின்னர் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி, கற்பழித்துள்ளார் கனேஷ். திகைத்துப் போன மகளீர் பொலிஸ் பிரிவு உடனடியாக எப்.ஐ,ஆர் பதிவு செய்து. அவரை கைது செய்தார்கள். ஆனால் அவ்வளவு தான். வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும். இன்றுவரை இந்த வழக்கு நீதிமன்றம் செல்லவில்லை. கனேஷ் குமார் பொலிஸ் பிரிவில் உள்ளதால். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.