தம்பி மனைவியை பல முறை பலாத்காரம் செய்த அண்ணா: தப்பித்த தம்பிஸ
01 Sep,2020
மும்பையின் கோவாண்டி பகுதியில் இரு சகோதர்கள் திருமணமாகி தங்களது மனைவிகளோடு ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார்கள். மூத்தவரான ரவிச்சந்திரன், தனது தம்பியான மிதுனின் மனைவியை அடிக்கடி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி வந்துள்ளார்.
அந்த 34 வயது அண்ணன் தன்னுடைய தம்பி வெளியே போயிருக்கும் நேரத்தில், தம்பி மனைவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் .ஆனால் அந்த பெண் அதற்கு சம்மதிக்காமல் அவரிடமிருந்து தப்பியோடிவிட்டார் .பிறகு இன்னொரு நாள் யாரும் வீட்டில் இல்லாத நேரம் மீண்டும் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இது போல் பலமுறை அவரை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இதனால் அந்த பெண் இந்த விஷயத்தை அவருடைய தம்பியிடம் சொல்ல முற்ப்பட்டபோது.
அப்பெண்ணை மிரட்டிய அண்ணன், விடையத்தை சொன்னால் தம்பியிடம் உன்னைப் பற்றி சொல்லி விவாகரத்து செய்யவைப்பேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அடிக்கடி இப்படி நடப்பதால் பொறுக்க முடியாத அந்த பெண் ஒரு நாள் அந்த வீட்டிலிருந்து தப்பி வந்து அங்குள்ள போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணாவை கைதுசெய்துள்ளார்கள் என்று மேலும் அறியப்படுகிறது. இன் நிலையில் பொலிசார் கைது செய்ய முன்னர், அவர் தம்பியின் மனைவியை தாக்க திட்டம் தீட்டி வைத்திருந்ததாகவும்.
சொல் பேச்சு கேட்க்கவில்லை என்றால் தம்பியையும் தக்கி இருவரையும் காலி செய்ய திட்டம் தீட்டி இருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.