வடக்கு இங்கிலாந்தின் கொவிட்-19 பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு பயணிக்க வேண்டாம்: ஸ்கொட்லாந்து
31 Jul,2020
கிரேட்டர் மன்செஸ்டர் மற்றும் வடக்கு இங்கிலாந்தின் பிற பகுதிகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு ஸ்கொட்லாந்து அரசாங்கம் எச்சரித்துள்ளது.
புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளின் எழுச்சி, முடக்கநிலை கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் கூறுகையில், ‘இங்கிலாந்தின் வடக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ள எவருக்கும் அல்லது அதே பகுதிகளிலிருந்து ஸ்கொட்லாந்து செல்ல திட்டமிட்டுள்ள எவருக்கும் அவர்களின் திட்டங்களை இரத்து செய்ய நான் கடுமையாக அறிவுறுத்துகிறேன்’ என கூறினார்.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அதிகரித்தைத் தொடர்ந்து கிரேட்டர் மன்செஸ்டர் மற்றும் கிழக்கு லங்காஷயர் மற்றும் மேற்கு யார்க்ஷயர் ஆகிய பகுதிகளில், வெவ்வேறு வீடுகளில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது