உலகில் சீனாவிற்கு நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவிற்கும் இடையேயான உறவில் விரிசல் விழத் தொடங்கியுள்ளது.
விளாடிவோஸ்டோக் நகரத்தை சீனா மீண்டும் சொந்த கொண்டாடும் விவகாரத்தினால், அதிருப்தி கொண்டுள்ள ரஷ்யா, சீனாவுடனான பல்லாண்டுகால உறவை முறித்துக் கொள்ள தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.
1600களில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த விளாடிவோஸ்டோக் நகரத்தை இரண்டாம் ஓபியம் போரில் ரஷ்யா கைப்பற்றியது. இந்த நிலையில், இந்த நகரத்தை சீனா சொந்தம் கொண்டாட தொடங்கியுள்ள நிலையில், இந்த செயலால் ரஷ்யா அதிர்ச்சியடைந்துள்ளது.
இதனால், சீனாவிற்கு அனுப்ப வேண்டிய எஸ்-400 வகை ஏவுகணைகளை அனுப்ப முடியாது என ரஷ்யா மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ரஷ்யாவின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லை என்ற போதிலும், ரஷ்யா இந்த முடிவை சுயமாக எடுக்கவில்லை என்று சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனிடையே, சீனாவின் உளவாளி ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சீனா அளித்த விளக்கம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை கோபப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் விவகாரம், விளாடிவோஸ்டோக் நகரத்தை சீனா சொந்தம் கொண்டாடும் விவகாரத்தினால் ஏற்கனவே இரு நாடுகளுக்கிடையில், மோதல் போக்கு நீடித்து வந்தநிலையில், தற்போது இந்த உளவாளி விவகாரம் நிலைமையை மோசமடைய வைத்துள்ளது.
ரஷ்யாவின் ஆர்டிக் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வந்த நபர் ஒருவர் சீனாவின் உளவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர் ரஷ்யாவில் இருந்து முக்கியமான உளவு தகவல்களை சீனாவிற்கு அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரஷ்ய அரசு குறித்த இரகசியங்களை இவர் சீனாவிற்கு அனுப்பி உள்ளார்.
இது ரஷ்யாவை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஏனெனில், முக்கியமாக ஒரு நட்பு நாட்டிற்குள் உளவாளியை அனுப்புவது குறித்து முன்னாள் உளவாளியான புடின் கோபமடைந்துள்ளார்.
இதையடுத்து அந்த உளவாளி பிடிபட்டது குறித்து சீனா அளித்த விளக்கம் மேலும் புடினை கோபப்படுத்தியுள்ளது. ‘நாங்கள் எங்கள் பாதுகாப்பிற்காகவே அவரை அனுப்பினோம், ரஷ்யாவிற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவில்லை, எங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதை செய்தோம்’ என்று சீனா கூறியுள்ளது.