வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்களின் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் தீராத வறுமையை ஏற்படுத்துமாம்...
28 Jul,2020
பொருளாதார சிக்கல் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டுமென்றுதான் அனைவரும் விரும்புவார்கள். ஏனெனில் வாழ்க்கையில் ஏற்படும் நிதி சிக்கல்கள் உங்களுக்கு நிறைய மன அழுத்தத்தைத் தரும். நீங்கள் சமீபத்தில் பண நெருக்கடியை எதிர்கொண்டிருந்தால், நீங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் படி நம்முடைய நிதி சிக்கல்களுக்கு நாம் அலட்சியமாக செய்யும் சில செயல்கள்தான் காரணமாக உள்ளது. அதேசமயம் நம் வீட்டில் இருக்கும் சில விஷயங்கள் கூட நம்முடைய நிதி சிக்கல்களுக்கு காரணமாக மாறலாம்.
இந்த பதிவில் நம் வாழ்க்கையில் இருக்கும் பணப்பிரச்சினையை நீக்க நாம் தவிர்க்க வேண்டிய செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் தவறவிடும் பணம் சில நேரங்களில் பணம் தற்செயலாக உங்கள் கையில் இருந்து நழுவிவிட்டால், அந்த பணத்தை உடனடியாக எடுத்து உங்கள் பாக்கெட்டில் வைக்கவும். அதை வேறு எங்கும் வைக்க வேண்டாம். அந்த பணத்தை வேறு இடத்தில் வைப்பது உங்களை சிக்கலில் தள்ளும். ஏழ்மையில் இருப்பவர் ஒரு ஏழை அல்லது பிச்சைக்காரன் காலையில் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவரைக் கூச்சலிட்டு திருப்பி விடாதீர்கள். அதற்கு பதிலாக, அவருக்கு ஏதாவது சாப்பிட அல்லது குடிக்க
ஏதாவது கொடுங்கள். நீங்கள் அவருக்கு ஒரு சிறிய தொகையும் கொடுக்கலாம். இடது கண் துடிப்பது உங்கள் இடது கண் திடீரென்று துடிக்க ஆரம்பித்தால், பண சிக்கல் முன்னால் உள்ளது என்று அர்த்தம். இதை எதிர்கொள்ள, சிவபெருமானுக்கு சிறிது தண்ணீர் அளித்து, உங்கள் குடும்பத்தின் நல்வாழ்வுக்காக லக்ஷ்மி தேவியிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் எந்த எண்ணெயில் சமைக்கிறீங்க? நீங்க சமைக்கிற எண்ணெய்களில் இருக்கும் ஆபத்து என்ன தெரியுமா? தும்மல் நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது, யாராவது தும்மினால், வீட்டிற்குள் திரும்பி சிறிது தண்ணீர் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுங்கள். இது உங்கள் நிதி சிக்கல் தவிர்க்கப்படுவதை உறுதி செய்யும். இது தவிர நிதி சிக்கலைத் தவிர்க்கும் சில வாஸ்து குறிப்புகளை மேற்கொண்டு பார்க்கலாம். கோவில்கள் உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையில் கோவில்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அதுபோன்ற கட்டிடம் இருந்தாலும் அதன் நிழல் வீட்டின் அந்த பகுதியில் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
தென்மேற்கு திசை உங்கள் வீட்டின் கூரை தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கிச் செல்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது வேறு எந்த திசையிலும் கட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது அது உங்களை நிதி குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும். பண்டைய கால இந்தியர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்ததற்கு அவர்களின் இந்த பழக்கங்கள்தான் காரணமாம்...! சுவர்கள் உங்கள் வீட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை விட உங்கள் வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு சுவர்கள் தடிமனாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மரம் நடுதல் உங்கள் வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு திசையில் பெரிய மரங்களை
நட்டு வைப்பது நிதி நிலையை வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. மட்டுமல்லாமல், ஒரு குடும்பத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு விபத்தையும் தவிர்க்க முடியும். மரம் நடக்கூடாத இடம் மரம் நடுவது நல்லதாக இருந்தாலும் வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மூலையில் உயரமான மரங்கள் இருக்கக்கூடாது. இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நிதி தடைக்கு வழிவகுக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும் டயட்... இத ஃபாலோ பண்ணுங்க கேன்சர்ல இருந்து ஈஸியா தப்பிக்கலாம்...! வீட்டின் மையம் வீட்டின் மையம் எப்போதும் சுத்தமாகவும், ஒழுக்கமாகவும் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். மேலும் இந்த இடத்தில் பூஜையறை கட்டப்படுவது
உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். ஸ்டோர் ரூம் உங்கள் வீட்டில் ஒரு ஸ்டோர் ரூம்க்கு இடம் இருந்தால், அது உங்கள் வீட்டின் தென் மேற்கு அல்லது மேற்கு மூலையில் கட்டப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது எதிர்மறை ஆற்றல் வராமல் தடுக்கும். இந்த 7 பழங்கள் உங்கள் உடல் எடையை நீங்கள் எதிர்பார்ப்பதை விட வேகமாக குறைக்கும்... நம்பி சாப்பிடுங்க! ஜன்னல் உங்கள் வீட்டின் எல்லா கதவுகளையும் ஜன்னல்களையும் எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். அவை அழுக்காக இருந்தால், உங்கள் பணப்புழக்கத்தில் தொந்தரவு ஏற்படும். அவற்றை தொடர்ந்து சுத்தப்படுத்துவதை உறுதி செய்துகொள்ளுங்கள்