கொரோனா வைரஸ்: பிரித்தானியாவில் மேலும் 25 பேர் உயிரிழப்பு
29 Jun,2020
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 575 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு மேலும் 815 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்து 11 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் இறப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையில் இன்றும் இறப்பு எண்ணிக்கை பெரும்பாலும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 93 ஆயிரத்து 881 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது