கறுப்பின நபரும் கொலை திடுக்கிடும் தகவல்
11 Jun,2020
கள்ள நோட்டை கடையில் கொடுக்க, அது செல்லாத நோட்டு என்று அவர்கள் பொலிசாருக்கு போன் செய்ய, ஜோர்ஜ் ஏன் தப்பிக்கவில்லை ? அது போக அவர் காரில் வந்து ஏன் சில நிமிடங்களாக அமர்ந்திருந்தார் ? மேலும் வந்த பொலிசார் பல கார்கர் பார்க் செய்து நிற்க்க, சரியாக ஜோர்ஜின் காரை எப்படி சென்று உடனே கண்டு பிடித்தார்கள். இது போக தனது காரில் ஏறுமாறு (ட்ரேக்) பொலிஸ் உத்தியோகஸ்தர் கூறிய வேளை தான், முறுகல் ஆரம்பித்தது. இதற்கு பின்னால் ஒரு மர்மக் கதை உள்ளது. கேட்டால் தலை சுற்றும். வாருங்கள் பார்கலாம்.
அமெரிக்காவில் கடந்த 25ம் திகதி கொலை செய்யப்பட்ட கருப்பின நபரான ஜோர்ஜ் மற்றும் அவரை கொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர், ஒருவருக்கு ஒருவர் ஏற்கனவே பழகிய நபர்கள் என்ற அதிரும் தகவல் வெளியாகியுள்ளது. மினிசோட்டா நகரில் ஒரு கசினோ(சூதாட்ட விடுதி ஒன்று உள்ளது) அதனை ஓமர் குரூப் என்னும் குழு நடத்தி வருகிறது. அங்கே பெரும் தொகையில் போலி தாழ்கள் உலா வருகிறதாம். அவர்கள் அதனை சிலவேளைகளில் தமது வேலை ஆட்களுக்கும் கொடுப்பது உண்டு. இன் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஓமர் குழு, எந்த ஒரு செயல்பாட்டிலும் இறங்க வேண்டாம் என்று, தமது வேலை ஆட்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்களாம்.
ஆனால் ஜோர்ஜ் இதனை கேட்டு நடக்கவில்லை. ஜோர்ஜை கொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தரான ட்ரேக், பொலிஸ் வேலையில் இணைய முன்னர் பவுன்சராக இந்த சூதாட்ட விடுதியில் பணியாற்றி இருக்கிறார். (இதற்கு ஆதாரம் உண்டு)
இதனால் இவர்கள் இருவருக்கும் நல்ல பழக்கம் இருக்கிறது என்கிறார்கள். கொரோனா லாக் டவுன் காரணமாக பலர் வெளியே வருவது இல்லை. இன் நிலையில் தொடர்ந்து ஜோர்ஜ், கள்ள நோட்டுகளை பாவித்து வந்தால். ஏதாவது ஒரு இடத்தில் அவர் மாட்டிக் கொள்வார். இதனூடாக தமது குழுவும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் என்று, முன்னரே ஊகித்த ஓமர் குழுவினர். ஜோர்ஜிடம் இந்த போலி தாழ்களை பாவிக்க வேண்டாம் என்று கட்டாயமாக கேட்டுக் கொண்டார்கள்.
ஆனால் அவர் தொடர்ந்து பாவித்து, ஒரு உணவு கடையில் சிக்கியும் விட்டார். இதனால் பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு செல்ல. அங்கே இருந்த ட்ரேக் இதனை ஓமர் குழுவுக்கு அறிவிக்க. அவர்கள் கூறியுள்ளார்கள். ஏதாவது ஒரு காரணத்தை காட்டி ஆளை போட்டு தள்ளச் சொல்லி உள்ளார்கள். இதனால் தானே புறப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த ட்ரேக், உடனே ஜோர்ஜுடன் பேசி அவரை தனது பொலிஸ் காரில் ஏற்ற முற்பட்டுள்ளார். சாதாரண $20 டாலர் கள்ள நோட்டு விடையத்திற்கு, பொலிஸ் நிலையம் வரை கொண்டு செல்ல தேவை இல்லை. விசாரணை நடத்தி விட்டு. சந்தேகம் என்றால் மட்டுமே பொலிசார் பொலிஸ் நிலையம் கொண்டு செல்வது வழக்கம்.
இல்லையென்றால் பொதுவாக அவர் அந்த நோட்டை எங்கே இருந்து பெற்றுக் கொண்டார் என்பது போன்ற தகவலை, எடுத்துக் கொண்டு ஆளை விட்டு விடுவார்கள். இதனை ஏற்கனவே அறிந்திருந்த ஜோர்ஜ், அப்பொழுது தான் சுதாரித்துக் கொண்டுள்ளார், தனக்கு ஏதோ நடக்கப் போகிறது என்று. இதில் தான் நீங்கள் ஒரு விடையத்தை கவனிக்க வேண்டும். சுமார் 6 நிமிடங்களுக்கு மேல். அவர் உயிர் பிரிந்து, உடல் மெல்ல மெல்ல குளிராகும் வரை, அந்த காலை ட்ரேக் எடுக்கவே இல்லை. ஒரு பொலிஸ் அதிகாரியை கைது செய்ய விடவில்லை. அதனால் நான் முயன்றேன். அப்பொழுது தவறுதலாக இறந்துவிட்டார் என்று ட்ரேக் கூறி தப்பி இருப்பார்.
ஆனால் இவர்கள் கெட்ட நேரம் அங்கே நின்ற சிலர் தமது போனில் இதனை வீடியோவாக எடுத்துவிட்டார்கள். இதில் தான் மேலும் ஒரு திடுக்கிடும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மிக மிக செல்வச் செழிப்போடு இருக்கும் இந்த ஓமர் குழு தான் இதனை முதன் முதலில் பேஸ் புக் ரிவிட்டரில் வெளியிட்டு, பணத்தை செலுத்தி எல்லோருக்கும் காட்டக் கூடிய வகையில் பூஸ்ட்(Fcebook Post Boost) செய்துள்ளார்கள். கொலையை நடந்த உடனே. வீடியோ வெளியாகி விட்டதால், உடனே இதனை ஒரு இனவாத கொலையாக மாற்ற, அவர்களே திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.
அது போக சிறியதாக ஒரு ஆர்பாட்டம், உணவு விடுதிக்கு முன்னால் இடம்பெற்ற வேளை(நீங்கள் வீடியோவில் பார்த்திருப்பீர்கள்) சிலர் கொண்டு வந்து ஆர்பாட்டக்காரர்களுக்கு இலவச குடி நீர் வழங்கினார்கள். மேலும் சிலர் உணவு பொட்டலங்களை கூட கொடுத்தார்கள். இவர்களே இந்த போராட்டத்தை பின்னால் நின்று தூண்டி விட்ட நபர்கள்(ஒமர் குழு) அதாவது வழக்கை தற்போது வேறு திசைக்கு திருப்பி உள்ளார்கள் என்பது தெளிவாக புரிகிறது. நன்றாக எண்ணிப் பாருங்கள், ஒருவர் கள்ள நோட்டோடு வருகிறார். அவருக்கு அந்த பணம் எங்கே இருந்து கிடைத்தது என்று விசாரணை செய்யாமல். இன வெறி தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்ய வேண்டிய கட்டாய சூழலில் பொலிசார் உள்ளார்கள்.
இதனோடு சேர்த்து பல கடை உடைப்புகள், கொள்ளைகள் நடைபெற, தற்போது பொலிசார் அதில் கவனம் செலுத்த. இந்த கள்ள நோட்டு கோஷ்டி மிக லாவகமாக தப்பி இருக்கிறார்கள் என்று அமெரிக்காவில் உள்ள நபர், இதனை நன்கு அறிந்தவர் என்று சொல்லப்படும் மாங்கோ எனப்படும் நபர் தற்போது தனது பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த மாங்கோ என்பவர் தனது பெயரை உருமறைப்பு செய்துள்ளார். காரணம் இந்த ஓமர் என்னும் குழு மிகவும் பயங்கரமானவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். நடந்த விடையங்களை வைத்துப் பார்த்தால் அவர் சொல்வதிலும் ஒரு உண்மையான பக்கம் இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா ? இதனை அமெரிக்க பொலிசார் தான் விசாரிக்க வேண்டும்.
ஆனால் குறித்த அந்த நகரில் உள்ள பல பொலிசார் ஓமர் என்னும் அந்த குழுவிடம் தான் மாமூல் பெற்று வருவதாக கூறப்படுகிறது. தகவல், ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்கப்பட்டுள்ளது. வெளியிடப்படுகிறது.