அமெரிக்காவின்கழுத்தில் காலை வைத்து மிதித்து கொன்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு அவரது மனைவி கொடுத்த தண்டனை
01 Jun,2020
அமெரிக்காவின்கழுத்தில் காலை வைத்து மிதித்து கொன்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு அவரது மனைவி கொடுத்த தண்டனை
அமெரிக்காவில் கருப்பின இளைஞரின் கழுத்தில் காலை வைத்து மிதித்து கொன்ற பொலிஸாருக்கு அவரது மனைவி தண்டனையளிக்கும் வகையில் அவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளார்.
அமெரிக்காவில் மின்னெபோலிஸ் பகுதியைச் சேர்ந்த கருப்பின இளைஞரான 46 வயதுடைய ஜார்ஜ் பிளாய்ட் கடந்த 27ஆம் திகதி 20 டொலர் கள்ள நோட்டு பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.
பின்னர் காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் தங்களது காலையும் அழுத்தி வைத்து இறுக்கினர்.
இதில் துடிதுடித்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார் ஜார்ஜ். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் உள்நாட்டு பிரச்சனையாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது. ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன.
மேலும் இந்த போராளிகளை நாய்கள், திருடர்கள் என்று அதிபர் ட்ரம்ப் சொல்லி உள்ளது மேலும் கொதிப்பை தந்து வருகிறது.
கருப்பின இளைஞரை கொலை செய்த அந்த பொலிஸார் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது. போராட்டம் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்த பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கழுத்தை நெரித்து ஜார்ஜை கொன்ற அந்த பொலிஸ்காரரை மனைவி விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக அவருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
தன்னுடைய கணவர் செய்த காரியம், தன்னை மனதளவில் அளவுக்கு அதிகமாக பாதித்துவிட்டதாகவும், அதனால் ஆழ்ந்த வேதனைக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.