8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 65 வயதான தாத்தாவும் உடந்தையாக இருந்த பாட்டியும் கைது!
22 May,2020
தனது எட்டு வயதான பேத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் 65 வயது தாத்தாவையும் அதற்கு உடந்தையாக இருந்த பாட்டியையும் கைது செய்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையிலிருந்து வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
நாவலப்பிட்டி கொந்தென்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் 2018 முதல் 2020 வரையிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது மகனின் மகளான குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளார்
இந்நிலையில், மகனும் மருமகளும் சிறுமியை சந்தேக நபர்களின் பராமரிப்பில் விட்டுவிட்டு அண்மையில் பதுளையிலுள்ள மருமகளின் பெற்றோரைப் பார்க்கச் சென்ற சந்தர்ப்பத்தில் கொரோனா அச்சம் காரணமாக நாட்டில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டமையால் அவர்களுக்கு தமது வீட்டுக்கு வரமுடியாமல் போயுள்ளது
இச்சந்தர்ப்பத்திலும் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இதன்போது தான் வலியால் அழுதபோதும் பாட்டி அதனை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் சிறுமி பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.