ஆங்கில கால்வாய் ஊடாக கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
10 May,2020
சாதகமான வானிலையை பயன்படுத்தி அண்மைய நாட்களில், மக்கள் கடத்தல் கும்பல்கள் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதால் 82 புலம்பெயர்ந்தோருடன் ஐந்து படகுகள் ஆங்கில கால்வாயில் எல்லைப் படையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
அதாவது, இரண்டு நாட்களில் 13 சிறிய படகுகளில் மொத்தம் 227 பேர் கலீஸிலிருந்து இங்கிலாந்தின் தெற்கு கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும், 44 புலம்பெயர்ந்தோர் கடக்கப்படுவதைத் பிரான்ஸ் எல்லைப் படை அதிகாரிகள் தடுத்துள்ளனர். இதுதவிர சமீபத்திய படகில் சுமார் 17 பேர் இருந்ததாக கருதப்படுகிறது.
இதுகுறித்து immigration compliance அமைச்சர் கிறிஸ் பில்ப் கூறுகையில், ‘மக்கள் கடத்தல் வர்த்தகத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தடுக்கப்பட வேண்டியது. இவ்வாறான வழிப் பயணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தைகள் உட்பட மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் வைக்க கடத்தல்காரர்கள் தயாராக இருப்பது கவலைக்குரியது’ எனக் கூறினார்.
நாடு VE தினத்தை கொண்டாடியபோது, ஆங்கில கால்வாய் முழுவதும் அபாயகரமான பயணத்தை மேற்கொண்ட பின்னர் 145 புலம்பெயர்ந்தோர் டோவரிக்கு கொண்டுவரப்பட்டதாக, உட்துறை அலுவலகம் உறுதிப்படுத்தியது. இது ஒரேநாளில் அதிகரித்த எண்க்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை 1,332 புலம்பெயர்ந்தோர் இங்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களில் 943 பேர் மார்ச் 23ஆம் திகதி முடக்கநிலை அமுல்படுத்தப்பட்ட பின்னர் வந்துள்ளனர்.