முறை கெட்ட ஒரு கலியாணம்: ஹரியை நடு ரோட்டில் கொண்டு போய் விட்டது எப்படி ?
01 May,2020
1981ல் உலக மக்களால் ஏன் தமிழர்களால் கூட மிகவும் பேசப்பட்ட ஒரு விடையம் டயானா சார்ளஸ் திருமணம். இவர்களுக்கு பிறந்த 2 செல்லப் பிள்ளைகள் தான் வில்லியம் மற்றும் ஹரி. தமிழ் மரபு மட்டும் அல்ல, ஆங்கில மரபிலும் மூத்த பிள்ளைக்கு அதுவும் ஆண்களுக்கு தான் அதிக செல்வாக்கும் உரிமையும் உண்டு. அதற்கு அமைவாக பிரித்தானியாவின் அரசராக வரும் உரிமையை, வில்லியம் பெற்று இருக்கிறார். இதனால் சிறு வயதில் இருந்தே இரண்டாம் பிள்ளையான ஹரிக்கு எல்லாம் 2ம் இடம் தான் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அவர் துவண்டு போக வில்லை. தாயார் இறப்பின் பின்னர், அவர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி பெரும் சாகசங்களை புரிந்தார். இதனால் வில்லியத்தை விட நல்ல பெயர் அவருக்கு தானாகவே வந்தது.
எல்லோருடனும் சகஜமாக பழகும் ஹரி, டயானாவை போன்றவர் என்று அனைவராலும் போற்றப்பட்டார். இதனால் ஒரு கட்டத்தில் வில்லியத்தின் புகழே மங்கிப் போகும் அளவு பிரபல்யமாக இருந்தார் இளவரசர் ஹரி. ஆனால் எல்லாரது வாழ்க்கையில் வரும் அதே காதல் அவரது வாழ்க்கையிலும் வந்தது. அங்கே தான் அவருக்கு ஏழரை சனி தொற்றிக் கொண்டது. தன்னை விட வயதுக்கு மூத்த நடிகையை அவர் காதலிக்க அராம்பித்தார். அவர் காதலித்தார் என்பதனை விட மெகான் மார்கிள் என்னும் நடிகையின் காதல் வலையில் சிக்கினார் என்று தான் சொல்லவேண்டும். மெகான் மார்கிள் முன்னரே திருமணமாகி விவாகரத்தை பெற்றவர். அரை நிர்வாணமாக நடித்த ஒரு நடிகை. பழம்பெரும் பெருமை மிக்க பிரித்தானிய ராச குடும்பத்திற்கு அவர் எந்த ஒருவகையிலும் ஏற்றவர் அல்ல.
பலர் இதனை எடுத்துச் சொன்னார்கள். மெகான் மார்கிள், அரச குடும்பத்திற்கு ஏற்றவர் அல்ல என்று. ஆனால் காதல் கண்ணை மறைக்க. பலரது எதிர்ப்புக்கு மத்தியில் திருமணம் நடந்தது. அமெரிக்காவில் பெரும் செலவில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த மெகான் மார்கிள். பிரித்தானியாவிலும் அதே தன்னிச்சையான வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டார். உத்தியோக பூர்வ அரன்மனையில் வசதிகள் இல்லை என்று, பல மில்லியன் செலவில் பொருட்களை வாங்கி குவித்தார். இவை அனைத்துமே மக்களின் வரிப் பணம் என்று பத்திரிகைகள் எழுத ஆரம்பித்தார்கள். உடனே என் தோல் நிறத்தை(அவர் கறுப்பினத்தை பூர்வீகமாக கொண்டவர்) பார்த்துஸ.. பேதம் காட்டுகிறீர்கள் என்று பத்திரிகை துறையை சாடினார். இதனால் கடுப்பான பத்திரிகைகள் தொடர்ந்து மெகான் மார்கிள் ஹரி தொடர்பாக பல செய்திகளை பிரசுரிக்க ஆரம்பித்தார்கள்.
நாளடைவில் வில்லியத்தின் மனைவி கேட் மிடில்டனோடு வாக்குவாதப்பட்டு. அண்ணா தம்பி உறவை பிரித்தார் மெகான். பின்னர் நாம் லண்டனில் இருக்க வேண்டாம் அரச பதவியை துறந்து கனடா சென்று வாழலாம் என்று ஆசைவார்த்தை பேசி ஹரியை நாடு கடத்தினார். மகாராணி எலிசபெத் அம்மையார், ஹரியை தனியாக அழைத்து அறிவுரை கூறினார். ஆனால் ஆசை நாயகியின் சொல்லே ஹரிக்கு தெய்வ வாக்காக இருந்தது. அதனால் அரசை துறந்து கனடா சென்றார். சென்ற இடம் எல்லாம் அவர்களுக்கு அவமானம் தான் மிச்சம். பிரித்தானிய மகாராணியை தமது தலைவியாக கொண்டு அரசாட்சி செய்யும் கனடா கூட, இவர்கள் பாதுகாப்பு செலவை ஏற்க்க மறுவித்துவிட்ட நிலையில். இன்று அவர்கள் அமெரிக்கா நியூயோர்க் சென்று வாழ்கை நடத்தி வருகிறார்கள்.
அடிக்கடி எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி வீதிகளில் ஹரியை தற்போது காண முடிகிறது. தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே அவர் அலைந்து திரிவதாக சொல்லப்படுகிறது. தனது நெருங்கிய நண்பருக்கு தொலைபேசி அழைப்பை விடுத்த ஹரி, தான் பிரித்தானிய ராணுவத்தை ரெம்பவும் மிஸ் பண்ணுவதாக குறிப்பிட்டுள்ளார். தான் அமெரிக்காவில் என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை. என் வாழ்கை எங்கே போகிறது என்று தெரியவில்லை என்று புலம்பி உள்ளார். இது தான் இன்றைய நிலை. பிரித்தானியாவில் செல்வாக்கு மிக்க பதவியில் இருந்தவர் ஹரி. என்ன விசேடம் நடந்தாலும் அங்கே சிறப்பு விருந்தினராக அவர் இருப்பார். இல்லையென்றால், அதிதியாக இருப்பார். ஆனால் இன்று ஒரு மூன்று முடிச்சால் அவர் படும் பாடு சொல்லில் அடங்காதவை.
பெண்கள் பொதுவாக பாபி டால் போன்றவர்கள். நல்லவர்கள் கிடைத்தால் பாலி டால், இல்லையென்றால் அனபெல் டால் தான்.
கண்ணன்