1915ல் அண்டார்டிக் கடல் பகுதியில் மூழ்கிய கப்பலை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் விஞ்ஞானிகள்
27 Apr,2020
அண்டார்டிக் கடலை ஆய்வு செய்ய சென்றபோது மூழ்கிய எர்னஸ்ட் ஷாக்லெட்டன் என்ற கப்பலை கண்டுபிடிக்க பெரும் முயற்சி தேவைப்படுகிறதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அண்டார்டிக் தீப்கற்பத்தில் உள்ள வெட்டல் கடலில் இக்கப்பல் 1915ஆம் ஆண்டு 3000 மீட்டர் ஆழத்தில் மூழ்கியது.
அதற்கு முன் சுமார் 10 மாதங்கள் பனிக்கட்டிகளின் இடையே மாட்டிக் கொண்ட இக்கப்பல், கடலில் மிதந்த ஒரு மிகப்பெரிய பனிக்கட்டியால் உடைக்கப்பட்டு, கடலுக்கு அடியில் மூழ்கியது. அதில் இருந்த நபர்கள் சிலர் உயிர் காக்கும் படகுகளிலும், நடந்தும் கரை வந்து சேர்ந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.
நொறுங்கிப் போன இந்தக் கப்பலை தேடி கண்டுபிடிக்க பல முறை முயற்சி மேற்கொள்ளப்படும் அதில் தோல்வியிலேயே முடிந்தது.
கடலுக்கு அடியில் கப்பல் நொறுங்கியிருக்கும் பகுதிக்கு மேலே உள்ள பனி எப்போதும் மிகவும் தடிமனாக இருக்கிறது என்று இதனை கண்டுபிடிக்க முயற்சித்தக் குழு தெரிவித்துள்ளது.
சரியான இடத்தை கண்டறிய நெருங்குவதற்கு கூட பெரும் முயற்சி தேவைப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர்.