நோர்வேயில் மீள ஆரம்பிக்கப்படவுள்ள ஆரம்பப் பாடசாலைகள்
22 Apr,2020
நோர்வேயில் ஒரு மாத கால முடக்கத்திற்குப் பின்னர் ஆரம்பப்பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொவிட் – 19 வைரஸ் பரவல் அந்நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால் நோர்வேயில் சிறுவர்கள் பாதிப்படைந்தைமை மிகக்குறைவு என்பதை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அரசின் இந்த முடிவுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
‘ஆரம்பப் பாடசாலைகளுக்கு செல்வது பாதுகாப்பானது’ என அந்நாட்டின் கல்வி அமைச்சர் Guri Melby தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நோர்வேக்கு அயல்நாடானா டென்மார்க்கில் ஆரம்பப்பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பேஸ்புக்கில் குழுமம் “My child should not be a guinea pig for Covid-19” ஒன்றை ஆரம்பித்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடைய கையெழுத்துக்களுடன் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நோர்வே தேசிய ஊடகம் ஒன்றில் கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 24 சதவீதமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப சம்மதம் தெரிவிக்காததுடன், 13 வீதமானவர்கள் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை எனத்தெரிகின்றது.
எது எப்படியே, ஆரம்பப் பாடசாலைகளை மீள ஆரம்பித்தால் சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் அங்கு கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரையில் கொரோனாவின் பாதிப்பு ஓரளவு குறைந்த நாடாக காணப்படும் நோர்வேயில், இதுவரை 7 ஆயிரத்து 241 பேர் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 182 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது