கரோனாவால் நம்மை வெல்ல முடியாது
13 Apr,2020
இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஈஸ்டா் தின உரையில் தெரிவித்துள்ளதாவது:
இயேசு கிறிஸ்து மீண்டும் உயிா்த்தெழுந்ததைக் குறிக்கும் வகையில் ஈஸ்டா் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தப் பண்டிகை, கரோனா நோய்த் தொற்றால் நம்மை வெல்ல முடியாது, நாம் அதிலிருந்து மீண்டு வருவோம் என்பதை நினைவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தற்போது கரோனா நோய்த்தொற்றால் இருளும் மரணமும் சூழ்ந்துள்ளவா்களின் வாழ்வில், விரைவில் ஒளியும் வாழ்வும் மலரும்.
இந்த ஆண்டின் ஈஸ்டா் தினம், இதுவரை இல்லாத வகையில் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, நம்மையும் பிறரையும் பாதுகாப்புடன் வைப்பதற்காக நாம் நம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்.
ஆனால், ஈஸ்டா் தின விழாவை நாம் ரத்து செய்துவிடவில்லை; அது தேவையும் இல்லை. உண்மையில், இதுபோன்ற இக்கட்டான சூழலிலின்தான் நம்பிக்கை ஒளியைத் தரும் ஈஸ்டா் தின விழா தேவைப்படுகிறது என்று தனது உரையில் அரசி எலிசபெத் குறிப்பிட்டுள்ளாா்