சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் சிலருக்கு ஜமன் தெரியுமா ?
09 Apr,2020
கொரோனா வைரஸ் ஏன் ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம் போல வந்து செல்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு மிக கடுமையாக்கி அவர்களை கொல்லும் ஜமனாகவும் உள்ளது என்ற பெரும் கேள்வி இருக்கிறது. இதற்கு தற்போது தான் சிறிய விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உங்கள் உடலில் எந்த வகையிலும் தொற்றலாம். ஆனால் தொற்றிய உடனே அது முதல் தாக்கத்தை ஏற்படுத்தும் 2 இடங்களாக, தொண்டை மற்றும் மூக்கு உள்ளது. இந்த நிலையிலேயே எங்களது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மை வைரஸோடு போராடி அதனை ஒரு கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தால். இது 12 தொடக்கம் 13 நாட்களுக்குள் தீரும் ஒரு நோய் என்றாகிவிடும்.
ஆனால் கொரோனா வைரஸ் பல்கிப் பெருகி, அது மூச்சு குழாயில் இறங்கினால் 2ம் நிலை ஆபத்தாக மாறி விடுகிறது. இதுவே ஒரு படி மேலே போய் எமது சுவாசப் பைக்குள் கொரோனா சென்றுவிட்டால். எமது உடலுக்கு தெரியும் இது மிக ஆபத்து என்று. அதனால் எமது உடல் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை ரத்தத்தில் உருவாக்கி, வைரசை அழிக்க முயற்ச்சி செய்யும். ஆனால் எமது நோய் எதிர்ப்பு சக்தியே எமக்கு எதிராக திரும்புகிறது என்பது தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நோய் எதிர்ப்பு சக்த்தி செல்கள் வைரசை மட்டும் அல்ல, சுவாசப் பைகளில் உள்ள செல்களையும் தாக்கி அழிக்கிறது. இதனால் சுவாசப் பைகளில் சளி தேங்க ஆரம்பிக்கிறது. மேலும் சுவாசப் பைகளால் செயல்பட முடியாமல் போகும் நிலை தோன்றுகிறது.
இதன் காரணமாகவே மனிதர்கள் பலர் இறக்கிறார்கள். இதில் ஆச்சரியமான விடையம் என்னவென்றால். பலருக்கு கொரோனா வைரஸ் வந்து குணமானதே தெரியாத நபர்கள் கூட இருக்கிறார்கள். அவர்களுக்கு அதீத நோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. சிலருக்கு சாதாரண ஜலதோஷம் பிடித்து குணமடைந்தது போலவும் இருக்கும். ஆனால் ஒரு சிலரின் நிலையே கவலைக்கு இடமாகிறது.
மது அருந்தினால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை வெகுவாக குறைவடைகிறது. அது போக உடலில் சக்கரை அளவு குவைவாக வைத்திருக்க பழகிக் கொள்ளுங்கள். மேலும் புகைப் பிடிப்பதை குறைந்தது கொரோனா தொற்று முடிவுக்கு வரும் வரையாவது தவிர்த்து கொள்ளுங்கள். இதனை முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.