வளர்ப்பு பிராணிகளுக்கும் பரவுகிறதா கொரோனா?
29 Mar,2020
பெல்ஜியம்: ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் வளர்ப்பு பிராணியான பூனைக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் இருந்து பரவ துவங்கிய கொடூர கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவி பல நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. குறிப்பாக பிரேசில், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளை முழுவதும் முடக்கி நிலைகுலைய வைத்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் உள்ள மீன் மார்க்கெட்டில் இருந்து தான் கொரோனா பரவியதெனவும், வவ்வால்களிடம் இருந்து பரவியதாகவும் செய்திகள் உலா வந்த நிலையில், சீன அரசு இந்த விஷயத்தில் தொடர்ந்து ரகசியம் காத்து வருகிறது.
தற்போது வரை மனிதர்களிடம் இருந்து சக மனிதர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று பரவி வந்த நிலையில், முதன்முறையாக ஹாங்காங்கில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களிடம் இருந்து 2 நாய்களுக்கு கொரோனா தொற்று பரவியது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் பெல்ஜியத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் இருந்து, அவரது வளர்ப்பு பிராணியான பூனைக்கு கொரோனா பரவியுள்ளது.
பூனைக்கு கொரோனா தொற்று இருப்பதை லீஜ் கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். பெல்ஜியம் அரசின் தொற்றுநோய் செய்தி தொடர்பாளரான டாக்டர் இம்மானுவேல் ஆண்ட்ரே கூறியதாவது, இது தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு ஆகும். "விலங்குகளுக்கும் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புக்கு பின்னர் கொரோனா ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.