போலியான கொரோன Test-Kit கொடுத்த சீனா கம்பெனி- ஸ்பெயின் நாடு கடும் அதிருப்த்தி
28 Mar,2020
ஸ்பெயின் நாட்டில் கட்டுக்கு அடங்காமல் கொரோனா பரவி வரும் நிலையில். அன் நாட்டு சுகாதார அமைச்சரோடு தொடர்பு கொண்ட சீன நிறுவனம் ஒன்று. தம்மிடம் கொரோனா வைரசை சோதனை செய்யும் சிறிய கருவிகள் உள்ளதாக கூறியுள்ளது. இதனை அடுத்து ஸ்பெயின் சுமார் 3 மில்லியன் கருவிகளை. உடனடியாக கொள்வனவு செய்து உள்ளார்கள். ஆனால் அந்த கருவிகள் அனைத்துமே போலியானை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஏன் எனில் அவை கொரோனா வைரஸ் இருப்பதை கண்டுபிடிக்கவில்லை.
குறித்த சிறிய கருவியில் , ரத்த துளியை வைத்தால், 10 நிமிடத்தில் கொரோனா இருக்கா இல்லையா என்று காட்டிவிடும் என்று கூறப்பபட்டது. சுகாதார அமைச்சருக்கு சாம்பிள் கருவியை காட்டும் போது. அது துல்லியமாக வேலை செய்தது என்றும். ஆனால் ஆடர் கொடுத்து, அதன் பின்னர் வந்து இறங்கிய கருவிகள் போலியானவை என்றும் ஸ்பெயின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். என்ன கொடுமை ?. இந்த விடையங்களில் எல்லாமா , விளையாடும் சீனா ? கம்பெனி.