ஜேர்மன் நாட்டு அதிபர் அஞ்சலா அறையில் அடைக்கப்பட்டார்: அவரது மருத்துவருக்கு கொரோனா
23 Mar,2020
ஜேர்மன் நாட்டு அதிபர் அஞ்சலா மேர்கிள், சமீபத்தில் சந்தித்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் சற்று முன் அஞ்சலா மேர்கிளை தனிமைப்படுத்தி அறையில் அடைத்துள்ளதாக கசியும் தகவல் தெரிவிக்கின்றன. அவருக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் முக்கியமான விடையம் என்னவென்றால். கொரோனா தொற்று 7 நாட்களுக்கு உட்பட்டது என்றால். சிலவேளைகளில் பரிசோதனைகளில் காட்டாது. கொரோனா வைரஸ் வெளிவிடும் ஒருவகையான நச்சு பதார்த்தம்(பற்றஜன்) ரத்தத்தில் கலந்தால் மட்டுமே பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இருக்கும்.
1954ம் ஆண்டு பிறந்த அஞ்சலா மேர்களுக்கு தற்போது 65 வயது ஆகிறது. உலக பெரும் தலைவர்களில் அஞ்சலா மேர்கிள் பலராலும் மதிக்கப்படும், மற்றும் சக்திவாய்ந்த பெண்மணியாகவும் திகழ்கிறார். அவர் கொரோனா வைரஸ் தொற்றை ஜேர்மனியில் மிக திறமையாக கையாண்டு வருவதோடு. அங்கே தொற்றை மிகவும் குறைவான நிலையில் வைத்திருக்கின்றார். இன் நிலையில் அவருக்கே இப்படி ஒரு நிலையா என்று மக்கள் அதிர்ந்து போய் உள்ளார்கள். இன் நோய் தாக்கம் யாருக்கு இருக்கிறது என்பது, கண்டறிய முடியாத நிலை காணப்படுகிறது. இதன் காரணமாகவே வீட்டில் தங்கி இருங்கள் என்று, தொடர்ந்து மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள்.