2 மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்
22 Mar,2020
2 மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்பது தெரியவந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று உலகம் முழுக்க பல நாடுகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன.
இதில் அமெரிக்கா ஏறத்தாழ வெற்றி கண்டு உள்ளதாக தெரிகிறது. கொரோனா வைரஸ் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தலாம் என்றும், 2 மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என தெரியவந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.