பிரிட்டனில் இன்று(19) மட்டும் 643 பேருக்கு தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
20 Mar,2020
பிரிட்டனில் இன்று மட்டும் சுமார் 643 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தொற்றின் எண்ணிக்கை 3,269 ஆக உயர்ந்துள்ளது. சாவு எண்ணிக்கை சராசரியாக ஒரு நாளைக்கு 30 பேர் இறக்கிறார்கள் என்ற நிலை தோன்றியுள்ளது. இது இவ்வாறு இருக்க, சீனாவை பின் தள்ளி சாவு எண்ணிக்கையில் முதல் இடத்தை எட்டியுள்ளது இத்தாலி. அங்கே இன்றைய தினம் மட்டும் 427 பேர் இறந்து, சாவு எண்ணிக்கை 3,405 ஆக உயர்ந்துள்ளது. இது முழு சீனாவிலும் இறந்து போன ஆட்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமாக உள்ளது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், அங்கே பலியெடுத்த உயிர்களை விட. இத்தாலியில் கூட பேர் ஏன் இறக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது அல்லவா ? இதற்கு இரண்டு காரணங்களை சொல்கிறார்கள் ஒரு காரணம் இத்தாலியில் அதிகம் வயது முதிர்ந்தவர்கள் வாழ்கிறார்கள் என்றும். மேலும் அங்கே 2வது வகை கொரோனா வைரஸ் பரவுகிறது என்கிறார்கள். இது கொடுமையான கொரோனா என்றும். ஆட்களை கொல்ல வல்லது என்கிறார்கள்.