கொரோனா வைரஸ் : பிரித்தானியப் பெண் இந்தோனேஷியாவில் உயிரிழப்பு
11 Mar,2020
இந்தோனேஷியாவில் 53 வயதான பிரித்தானியப் பெண் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்தோனேசிய சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, பாலி நகரில் அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். அந்த நாட்டில் Covid-19 வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட முதல் மரணம் இதுவென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் கண்டறியப்பட்டபோது நோயாளி ஏற்கனவே மோசமான உடல்நிலையில் இருந்தார் என்று இந்தோனேசிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரையில் இங்கிலாந்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். ஜப்பானில் தரித்து நிற்கும் டயமன்ட் பிரின்சஸ் பயணக் கப்பலில் இருந்த பிரித்தானியப் பிரஜை கடந்த மாதம் உயிரிழந்தார்.
நிதியமைச்சர் ரிஷி சுனக் 2020 வரவுசெலவுத் திட்டத்தில் கொரோனோ வைரஸின் தாக்கத்தைச் சமாளிக்க 30 பில்லியன் பவுண்ஸ் நிதியை ஒதுக்கியுள்ளார். இதில் 5 பில்லியன் பவுண்ஸ் நிதி அவசரகாலத் திட்டத்திற்காக சுகாதாரத்துறைக்கு வழங்கப்படவுள்ளது