பிரான்ஸ் கல்வெட்டு: அதிர்ச்சி தந்த 230 வருட செய்தி
27 Feb,2020
பிரான்ஸில் 230 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள செய்தியை கண்டறிந்து சொல்பவர்களுக்கான போட்டியில் இருவர் வெற்றி பெற்று சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரத்து ரூபாய் பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்கின்றனர்.
பிரான்ஸின் பிலகாஸ்டல் கிராமத்தில் உள்ள, பிரஞ்சு புரட்சிக்கு முந்தைய காலக் கல்வெட்டு ஒன்றிலிருந்த செய்தியை உள்ளூர் நிபுணர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
எனவே அதற்காக போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது. அந்த போட்டியில் பங்கேற்றவர்களின் மொழிபெயர்ப்பு வேறுமாதிரியாக இருந்தாலும் அவர்கள் சொன்ன செய்தி ஒன்றுதான் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த கல்வெட்டு ஒரு மனிதனின் இறப்பை சொல்வதாக இருந்தது என அந்த போட்டியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
அந்த கல்வெட்டின் செய்தியில் 1786 மற்றும் 1787 போன்ற வருடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. படகில் வந்த ஒரு மனிதர் காற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார் என்ற அதிர்ச்சியான ஒரு செய்தியே அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று போட்டியின் வெற்றியாளர்கள் இருவருமே தெரிவித்திருந்தனர்