சர்வதேச போட்டிகளில் நான்கு ஆண்டுகள் தடைக்கு எதிராக ரஷ்யா மேன்முறையீடு
29 Dec,2019
2020ஆம் ஆண்டு ஒலிம்பிக், 2022 பீஃபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் தடைகளை எதிர்த்து ரஷ்யா மேன்முறையீடு செய்துள்ளது.
அந்நாட்டு ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் சார்பில் இந்த மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மனு சுவிட்சர்லாந்தின் லுசானாவில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் (சி.ஏ.எஸ்) விரைவில் விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊக்க மருந்து விவகாரத்தில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் சிக்கி இருந்தனர். அந்நாட்டு அரசாங்கமே இதற்கு ஆதரவாக இருந்தது என்பது வாடா (Wada) எனப்படும் உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் மேற்கண்ட விசாரணைகளில் தெரியவந்தது. இதனால் சர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு வாடா நான்கு ஆண்டுகள் தடை விதித்தது.
இந்தத் தடையால் ரோக்கியோ ஒலிம்பிக் (2020), பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் (2020), கட்டார் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி (2022) ஆகியவற்றில் ரஷ்யா கலந்துகொள்ள முடியாத நிலையும் உருவானது. எனினும் ஊக்க மருந்து குற்றச்சாட்டில் சிக்காத வீர, வீராங்கனைகள் தனிப்பட்ட முறையில், ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்கலாம்.
இந்நிலையில் வாடா விதித்த 4 ஆண்டுகள் தடையை எதிர்த்து ரஷ்யா மேற்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.