வங்கி மேலாளரான தமிழ் இளைஞன் அடித்துக்கொலை!
12 Dec,2019
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பான தகராறில் வங்கி மேலாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
சாத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாக அதிமுக கிளைச் செயலாளரான ராமசுப்பு என்பவர் ஆலோசனை கூட்டத்தை நேற்று இரவு நடத்தினார்.
இந்த கூட்டத்திற்கு தனது ஆதரவாளர்களை மட்டும் ராமசுப்பு அழைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த வங்கி மேலாளரான சதீஷ்குமார் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட மோதலில் சதீஷ்குமார் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்துள்ளார். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்து இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ராமசுப்பு மற்றும் அவரது ஆதரவாளர்களான கணேசன், முத்துராஜ், சுப்புராம், ராம்குமார், சுப்புராஜ், செல்வராஜ் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.