ஆபாச படநபர் கைது;
12 Dec,2019
குழந்தைகள் ஆபாச படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்து வந்த திருச்சி இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார்.
குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது. அதனை சமூக வலைதளங்களில் பரப்புவது. செல்போன் மூலம் பகிர்வது தண்டனைக்குரிய குற்றம் என்று தமிழக கூடுதல் டிஜிபி ரவி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனை கேலி செய்யும் விதமாக சிலர் சமூக வலைதளங்களில் சிறுத்தை சிக்கும் சில் வண்டு சிக்காது என்றெல்லாம் போலீசாரை விமர்சித்தனர்.
இந்த நிலையில் குழந்தைகள் ஆபாச படங்களை முக நூலில் பதிவேற்றம் செய்தவர்கள், அதனை பகிர்ந்தவர்களின் விவரம் ஒவ்வொரு மாவட்ட காவல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. இதில் முதல் சில்விஷ வண்டு போலீஸ் பிடியில் சிக்கி உள்ளது.
முக நூலில் நிலவன் நிலவன்,ஆதவன் ஆதவன் ஆகிய போலி கணக்குகளில் இயங்கிய திருச்சி பாலக்கரை காஜாபேட்டை புது தெருவை சேர்ந்த கிரிஸ்டோபர் அல்போன்ஸ் என்கிற 42 வயது நபர் தான் அவன்.
இன்று அதிகாலை 5 மணிக்கு கிறிஸ்டோபர் அல்போன்ஸ் வீட்டின் கதவை தட்டிய காவல்துறையினர் அவனை அலெக்காக தூக்கி வந்தனர். ஆபாச படங்களை பதிவேற்றம் செய்வதற்கும் அதனை சுமார் 15 நபர்களுக்கு பகிர்வதற்காகவும், அவன் பயன்படுத்திய ஸ்மார்ட் போனும் பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறையினர் வருவதற்கு முன்பே செல்போனில் வைத்திருந்த ஆபாச படங்களை எல்லாம் கிறிஸ்டோபர் அழித்துள்ளான்.
ஆனால் அந்த ஆபாச படங்களை அனுப்ப பயன்படுத்திய பேஸ்புக் மெசேஜ்சர் ஆப் கிறிஸ்டோபரை வசமாக சிக்க வைத்துள்ளது. இதனை தொடர்ந்து கிறிஸ்டோபர் அல்போன்ஸ் மீது போக்சோ உள்ளிட்ட 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த திருச்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் சிறையில் அடைத்தனர்.
70ஸ் கிட்டான கிறிஸ்டோபர் அல்போன்ஸ், ஐ.டி.ஐ. மெக்கானிக்கல் படிப்பை முடித்தும், வயது 42ஐ கடந்த நிலையில் , உருப்படியான வேலைக்கு செல்லாமல் ஆபாச படத்திற்கு அடிமையாகி சுற்றி திரிந்ததால், நீண்ட காலமாக திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
தனிமையில் தவித்த சில் வண்டு கிறிஸ்டோபர் அல்போன்சுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதான் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதுவரை கிறிஸ்டோபர் அல்போன்சுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில் நாகர்கோவிலில் தங்கி வீட்டு வேலை செய்து வந்த நிலையில் தற்போது குழந்தைகள் ஆபாச பட வழக்கில் சிக்கியுள்ளான் கிரிஸ்டோபர்.
குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பதும், அதனை பகிர்வதும், மன நோய் என சுட்டிக்காட்டும் காவல் துறையினர் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களை இது போன்ற விபரீத செயல்களுக்கு பயன்படுத்துவோர் அடுத்தடுத்து ஸ்மார்ட் போனை போலீசிடம் பறிகொடுத்துவிட்டு ஜெயிலுக்கு செல்லும் நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
சேட்டை செய்யும் சிறுத்தை மட்டுமல்ல சில்மிஷம் செய்யும் சில்வண்டுகளும் இனி காவல் துறையிடம் ஒவ்வொன்றாக சிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.