பெண் மருத்துவர் எரித்துக் கொலை’; அதிர்ச்சி காரணம்!
29 Nov,2019
தெலங்கானாவில் பெண் கால்நடை மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேம்ஷாபாத் நரசய்யபள்ளி பகுதியை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்பவர், மாதாப்பூரில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற இவர் வீடு திரும்பும் வழியில், தனது சகோதரிக்கு போன் செய்துள்ளார். அப்போது தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆகிவிட்டதாகவும், தன்னை லாரி ஓட்டுநர்கள் சிலர் பின் தொடர்கிறார்கள் என்று கூறியுள்ளார். அதன் பிறகு அவரது செல்போன் ஸ்விச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது.
பின்னர் அதிகாலையில் ரங்காரெட்டி மாவட்டம் சட்டப்பள்ளி பாலத்தின் கீழ் பிரியங்கா ரெட்டியின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிலாம் என சந்தேகிக்கும் அம்மாநில போலீசார் அது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.